க.கிஷாந்தன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்த கோரியும் கூட்டு ஒப்பந்தத்தை இம்மாத இறுதிக்குள் கைச்சாத்திட கோரியும் 13.03.2016 அன்று காலை 10 மணிக்கு நுவரெலியா – இராகலை நகர மத்தியில்...
க.கிஷாந்தன்
அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் மறைந்த கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதி அஞ்சலிக்காக 13.03.2016 அன்று வருகை தந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முன்னால் ஜனாதிபதி...
அஸ்மி அப்துல் கபூர் (தேசிய காங்கிரஸ் - முந்நாள் மாநகர சபை உறுப்பினர் ) ஊடக அறிக்கை ,
அக்கரைப்பற்றுக்கான அரசியல் பழிவாங்கல் நெடுகால வரலாற்றை கொண்டது.அதற்கான இறைவனின் அநுகூலமே அதாஉல்லாஹ் அமைச்சரின் அபிவிருத்தியும்...
மக்களின் காணிகளை ஆறு மாதங்களில் கொடுப்பதாக கடந்த நத்தார் தின நிகழ்வில் தான் அளித்த வாக்குறுதியின்படி இன்னும் மூன்று மாதங்களில் காணிகளை அவர்களிடம் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளனர்.
அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை துரித கதியில் மேற்கொள்வதற்காக நியமிக்கப்படும் மாவட்ட இணைப்பு கமிட்டிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி கமிட்டிகள்...
இலங்கை முழுவதும் தற்போது மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனினும் திடீரென இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டதற்கான காரணங்கள் தொடர்பாக அவர் கருத்து எதுவும் வெளியிடவில்லை.
இதேவேளை கடந்த மாதம் 25ஆம் திகதியும் நாடு முழுவதும் மின்சாரம்...
இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் காணாமல் போன தங்கத்தை பயன்படுத்தி டுபாயில் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாரியளவிலான முதலீடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பாரிய நிதி மோசடி குற்றப் பிரிவினர் இவ்வாரம் டுபாய் நாட்டுக்குச் செல்கின்றனர்.
சுமார்...
சுலைமான் றாபி
அமைச்சர் ரிஷாத் மற்றும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா உள்ளிட்டோர்களும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களும் இம்மாதம் 19ம் திகதி பாலமுனையில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டிற்கு சமூகமளிக்கலாம்...
இலங்கை கடற்படை சிறைபிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 20 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இராதாகிருஷ்ணன் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நேற்று வந்தார்.
அப்போது அவர்...
ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டை முன்னிட்டு இளைஞர் தொண்டர் அணியினரையும், மு.கா மக்கள்பிரதிநிதிகளையும் இணைத்து சிநேகபூர்வ 'கிரிக்கெட் சமர்'; பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (12) சனிக்கிழமைவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர், கட்சியின் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இப்போட்டியில் கட்சிக்காக உயிர் தீர்த்த போராளிகளின் பெயர்களைத் தாங்கிய பிரதி அமைச்சர் ஹரீஸ், பிரதி அமைச்சர் பைசால்காசீம், சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் ஏ.எல்.ஏ.மஜீத், மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர்ஏ.எல்.தவம், மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், உயர்பீட உறுப்பினர்எம்.ஏ.வாஹிட் தலைமையிலான கிரிக்கெட் அணிகள் இக்கிரிக்கெட் சமரில் களமிறங்கியது.
5 ஒவர் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட இக்கிரிக்கெட் சமரில் பிரதி அமைச்சர் பைசால் காசீம் தலைமையிலானஅணி சம்பியனானது.
இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிக்காக கிண்ணங்களை வழங்கி வைத்தார்.
இப்போட்டி நிகழ்ச்சி கட்சி எதிர்கால ஆரோக்கியதிற்கு கால்கோலாக அமைந்துள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் கட்சியின் பற்றும்ஏற்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூக் ஹக்கீம் இதன்போது கருத்து தெரிவித்தார்.
இக்கிரிக்கெட் சமர் மூலம் மு.கா மக்கள் பிரதிநிதிகளுக்கும் இளைஞர்களுக்குமிடையில் பரஸ்பர உறவினையும், கட்சியில் யாவரும்சமமானவர்கள், இளைஞர்களும் கட்சியின் பங்காளிகள் என்ற உணர்வினை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளமை நிகழ்வின்வெற்றியாகும் என அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.