தலைமைப் பதவி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி – ஐ.தே.க சந்திப்பு !

Ranil-maithri
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளனர்.

அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை துரித கதியில் மேற்கொள்வதற்காக நியமிக்கப்படும் மாவட்ட இணைப்பு கமிட்டிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி கமிட்டிகள் போன்றவற்றின் தலைமைப் பதவி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியிருனக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இந்த முரண்பாட்டு நிலைமை காணப்படுகின்றது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளனர். 

மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைமைப் பதவி தொடர்பில் சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் நிலவி வரும் கருத்து முரண்பாடுகளைகளையும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.