இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது :பொன்.இராதாகிருஷ்ணன்

 

1218568922Untitled-1

இலங்கை கடற்படை சிறைபிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 20 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இராதாகிருஷ்ணன் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நேற்று வந்தார். 

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– 

ஒவ்வொரு முறையும் மீனவர்கள் பிரச்சினை வரும் போது அது தொடர்பாக பேசி அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். இதுவரை சுமார் 1,500 மீனவர்களை இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்டு உள்ளோம். 

தற்போது தூத்துக்குடியில் இருந்து 20 மீனவர்களை பிடித்துச் சென்று உள்ளார்கள். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மூலம் அனைத்து மீனவர்களையும் துரிதமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். எதையும் உடனடியாக செய்து விடமுடியாது. வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம், மீனவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள், என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.