- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

கொழும்பு குப்பைகளை கரதியான பிரதேசத்தில் கொட்டுவதை தடைசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கரதியான பிரதேசத்தில் கொட்டுவதை தடைசெய்யுமாறு கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் கரதியான பிரதேச மக்களால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்டத்திற்கு கரதியான பகுதியிலுள்ள ஏராளமான மக்கள்...

கண்டி மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மகிந்தவுக்கு SLFP அழைப்பு

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரத்துங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் கண்டி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு...

மறிச்சிக்கட்டியில் இன்று ஏற்பட்டிருக்கும் ஆபத்து நாட்டில் வாழும் ஏனைய முஸ்லீம்களையும் பாதிக்கக்கூடியது

யு.எம்.இஸ்ஹாக் ,நற்பிட்டிமுனை     முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி மக்களின் பிரச்சினை  அரசியல் கண்கொண்டு பார்க்க வேண்டியதோ ,கட்சிகள் நிறங்கள்  சார்பாக பார்க்க வேண்டிய விடயமோ அல்ல . இது ஒரு சமுதாயத்தின் உரிமைப்  பிரச்சினை...

மஸ்கெலியா வைத்தியசாலையில் நிலவிவரும் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படுமா ?

க.கிஷாந்தன் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் அடிப்படை பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுமா என நோயர்கள் மற்றும் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 'நோயாளர்கள் தங்கி சிகிச்சைப் பெறும் வகையில், வைத்தியசாலையில் 6 வார்டுகள் உள்ளன....

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டியொன்று மீட்பு

க.கிஷாந்தன் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்டப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் 22.04.2017 அன்று சிறுத்தை குட்டியொன்று உயிரிழந்த நிலையில் பிரதான வீதியின் மருங்கில் காணப்படுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். அவ்வீதியில் வாகனங்கள் அதிகமான...

றிஷாடின் சதொச கிளை நிலையங்களும்; ஹக்கீமின் கற்பன் பாய் உற்பத்தியும் : மீரா.எஸ்.இஸ்ஸடீன்

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான சகோதரர் றிஷாட் பதியுத்தீன் மக்களுக்குச் செய்கின்ற நல்ல காரியங்களை மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் சிலர் கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றனர். மகிந்த ராஜபக்ஷ ஜனாதியதியாக இருந்த வேளை கிராண்பாஸ்...

IPL : ரெய்னாவின் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத் லயன்ஸ்

ஐ.பி.எல். சீசன் 10-ன் 23-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் வெற்றி பெற்றது.  முன்னதாக...

மஹிந்த ஆட்சியை கவிழ்க்க இந்தியா பணம் வழங்கியமை SLMC முக்கியஸ்தர்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை கவிழ்க்க இந்தியா பணம் வழங்கியமை தற்போது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஊடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது போல இன்னும் எவற்றுக்கெல்லாம் பணம் வழங்கப்பட்டன என்பதுதொடர்பில் பல உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் எனபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை கவிழ்க்க இந்தியா பணம் வழங்கியமை தொடர்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஊடாக தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இது ஒரு விடயம் மாத்திரம்தான்.இன்னும்பலஉண்மைகள் விரைவில் வெளிச்சத்து வரும்.முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்க இந்தியா வழங்கிய பணம் தொடர்பில் முஸ்லிம்காங்கிரஸுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. இலங்கை சிறுபான்மை மக்களை எம்மிடம் இருந்து பிரிக்க பாரிய சதிகள் மேற்கொள்ளப்பட்டன.அதற்காக வெளிநாடுகள் பாரியஅளவில் பணம் வழங்கியுள்ளமையை அறிந்துகொள்ள முடிகிறது.மு.காவிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் செய்தியானது இவ்வாட்சியை கவிழ்க்க முஸ்லிம்களே பிரதான ஆயுதமாக பாவிக்கப்பட்டுள்ளார்கள் என்பதாகும். சர்வதேசம் ஒரு ஆட்சியை கவிழ்க்க சிந்தித்தால் அவர்கள் தேர்தல் காலப்பகுதியில் மாத்திரம் முயற்சிக்கமாட்டார்கள்.பல வருடங்கள்முன்பே பல திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். அவ்வாறே எமது ஆட்சிக் காலத்தில் பல திட்டமிடப்பட்ட சதிகள் மூலம்எம்மிடமிருந்து முஸ்லிம்கள் பிரிக்கப்பட்டார்கள்.சில வேளைமு.காவிற்கு வழங்கப்பட்ட பணமானது தேர்தலுக்காக அல்லாமல்முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரித்த கொந்தராத்துக்காகவும் வழங்கப்பட்டிருக்கலாம்.பணம் வழங்கி ஆட்சியை கவிழ்ப்பதுநேர்மையான முறையல்ல.எமது ஆட்சியை குறுக்கு வழியிலேயே கவிழ்த்துள்ளனர்.இந்தியாவின் கூட்டு சதியால் உருவாக்கப்பட்டுள்ளஇவ்வாட்சியின் பின்னால் செல்வது நல்லதல்ல. இந்தியாவிற்கு வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து தனது தலை வலியை தீர்க்க வேண்டிய மிகப் பெரிய தேவை உள்ளது.எமது ஆட்சிக்காலத்திலேயே அவைகள் பிரிக்கப்பட்டன.அவர்களின் கனவு எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெறாது என்பதெல்லாம் இந்தியாவிற்குநன்றாகவே தெரியும்.இன்று இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களின் முஸ்லிம்களிலுடனான போக்கு அனைவரும்அறிந்ததே.அவர்களின் திட்டங்கள் எவ்வாறு இருக்குமென சற்று சிந்தனை செய்து கொள்ளுங்கள்.அவர்களின் திட்டங்களுடனானஆட்சி இலங்கையில் நிறுவப்பட்டால் என்ன நடக்கும்? எனது தந்தை எட்டு வருடங்களாக இந்தநாட்டின் ஜனாதிபதியாக இருந்துள்ள போதும் கடைசி இரண்டு வருடங்களிலேமுஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் நாட்டில் தலைதூக்கியது.சம்பிக்க போன்றவர்களே அதனை ஆரம்பித்து வைத்தார்கள். அதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.அது தொடர்பில் நாம் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என நினைக்கின்றேன்.நாம்இனவாத போக்குடையவர்கள் என்றால், ஏன் எமது ஆட்சிக்காலத்தின் முதல் எட்டு வருடத்தில் இனவாதத்தை வெளிக்காட்டவில்லை? ஆட்சிக் கவிழ்ப்புக்கு எவ்வாறு வெளிநாடுகளால் பணம் வழங்கப்பட்டதோ அது போன்றேசிறுபான்மையின முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்கவும் பணம் வழங்கப்பட்டுள்ளது.ஆட்சியை கவிழ்க்க பணம் வழங்கப்பட்ட சங்கதி எவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவெளியே வந்ததோ அது போன்று  முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்க பணம் வழங்கப்பட்டது தொடர்பிலும் பல உண்மைகள்விரைவில் வெளிச்சத்துக்கு வரும். இந்திய அரசு எமது ஆட்சியை கவிழ்க்க பணம் வழங்கியதாக கூறப்படுகின்றமை சாதாரண விடயமல்ல.இந்திய அரசு கடந்த தேர்தல்காலத்தின் போது எமது ஆட்சியை கவிழ்க்க பணம் வழங்கியதா என்பதை இதன் பின்னால் ஒழிந்துள்ள பாரதூரங்களை அறிந்து இந்தியதூதரகம் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்‌ஷ தனது அறிக்கையில்குறிப்பிட்டுள்ளார். -ஊடகபிரிவு-

இனவாதிகளின் ஆலோசனைக்கே இன்றைய அரசு தொழிற்படுவதனை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்

இறக்காமத்து மாயக்கல் விவகாரம் இன்று பூதாகரமாக உருவெடுத்திருக்கின்றது. கண்கட்டி வித்தைகளினால் நம் மக்களின் பூர்வீகக் காணிகளைத்  திட்டமிட்டு அபகரிப்பதற்கு தீய சக்திகள் வலிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கின்றார்கள். அவர்களுடைய தீய எண்ணங்களை நடைமுறைப்படுத்தவதற்கு முதற்கதவாகவே...

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போதிலும் குப்பை மேட்டுக்கு முடிவு எடுக்க முடியாமல் போய் விட்டது : மஹிந்த

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எமது ஆட்சிக்காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதன் காரணமாகவே மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பிலும், குப்பைகளை அகற்றுவதற்கும் எம்மால் முடியாது போனதாக முன்னாள் ஜனாதிபதி...

Latest news

- Advertisement -spot_img