ஹாசிப் யாஸீன்
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு பொருட்கள் கூட இலஞ்சமாகவேபார்க்கப்படுகின்றது. எனவே உத்தியோகத்தர்கள் இலஞ்சம், ஊழல் விடயங்களிலிருந்து தவிர்ந்துகொண்டு தங்களது சேவைகளை மக்களுக்கு வழங்குவதோடு தொழில்களையும் பாதுகாத்து கொள்ளவேண்டும் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்உத்தியோகத்தர்கள் இலஞ்ச, ஊழலற்ற சேவையினை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு உறுதி மொழிஎடுக்கும் நிகழ்வு நேற்று (09) புதன்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிபிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, கணக்காளர்எம்;.எம்.உசைனா, திவிநெகும முகாமையாளர்களான ஏ.சீ.ஏ.நஜீம், எஸ்.றிபாயா உள்ளிட்ட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உத்தியோகத்தர்கள் அனைவரும் இலஞ்சம், உழலுக்கு எதிராக உறுதி மொழிஎடுத்துக்கொண்டனர்;.
அசாஹீம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஐம்பது மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் நேற்று (09.12.2015) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ. அப்துல் வஹாப்...
அஷ்ரப் ஏ சமத்
இந்த நாடடின் சரித்திரத்தில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளன. இக் கட்சியின் இரண்டு தலைமைத்துவம் சோ்ந்து இந்த நாட்டின் மக்கள் அபிவிருத்தியில் கரிசணை கொண்டு இரண்டு பிரதான...
அஷ்ரப் ஏ சமத்
ஆசிய மன்றத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண முதலைமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கு இடையில் கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன் போது ஆசிய மன்றத்தினால் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட...
ஊழல், இலஞ்சமற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப் பொருளின் கீழ் கொழும்பில் நேற்று விழிப்புணர்வுப் பேரணியொன்று நடத்தப்பட்டது. சமூக செயற்பாட்டாளார்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஏற்பாட்டில் நடந்த இந்த பேரணி...
சிங்கப்பூரில் சிகிச்சையை நிறைவு செய்து கொண்டு, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் நேற்று பிற்பகல் மன்னாரை வந்தடைந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிங்கபூரில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட...
ஐ.ம.சு.முவை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய போக்குவரத்து அமைச்சர் நிமல்.சிறிபால டி சில்வாவுக்கும், முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்குமிடையில் பாராளுமன்றத்தில் நேற்று கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற குழறுபடிகள் மற்றும்...