போதைப் பொருளுடன் ஒருவர் கைது !

அசாஹீம்

 

 மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஐம்பது மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் நேற்று (09.12.2015) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ. அப்துல் வஹாப் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்புபிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ. அப்துல் வஹாப் மற்றும் பொலிஸ் அதிகாரி எம்.பி.எம்.தாஹா ஆகியோர் தேடுதல் நடாத்திய போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏறாவூர் மீறாகேணி மையவாடி வீதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவரிடம் இருந்து ஐம்பது மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பெருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.