ஊடகப்பிரிவு
நூறு வருட பழமைவாய்ந்த இலங்கையின் கூட்டுறவுத் துறையை மறுசீரமைத்து நவீனத்துவப்படுத்தும் வகையிலான 2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதை ஒன்றுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
95வது சர்வதேச...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 2...
வடக்கு கிழக்கில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பயங்கரவாதிகளால் கொன்று குவிக்கப்பட்டதை நாம் முற்றாக நிறுத்தியபோது எம்மை பாராட்டாதவர்கள் அலுத்கமையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வினை மையமாக வைத்து எம்மை பலவீனப்படுத்தினார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நேற்று இரவு அவரை சந்தித்த முஸ்லிம்களிடம் அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர் ..
எம்மிடம் இருந்து ஆட்சியை பறிக்க மேற்குலம் செய்த சதியில் இந்த நாட்டு முஸ்லிகள் மாட்டிக்கொண்டனர்.அதை இப்போது அவர்கள் உணருகின்றனர்.என்னை நோக்கி தற்போது படையெடுக்கும் முஸ்லிம்கள் மூலம் நான் இதனை அறிந்துகொள்கிறேன்.இந்த நாடு தற்போது மேற்குலகத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் தீவிரமாக சென்றுவிட்டது.
அன்று மூதூரில்,கிண்ணியாவில் காத்தாங்குடியில், முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் விடுதலை புலிகளால் கொலைசெய்யப்பட்டனர்.முஸ்லிம்கள் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டபோது நாம் அதை தடுத்து நிறுத்தினோம்.எமது அர்பணிப்ப்பு காரணமாக உந்தும் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் சுதந்திர காற்றை சுவாசி சுவாசிக்கின்றனர்.அதற்காக எம்மை பாராட்டாதவர்கள் அலுத்கமையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வினை மையமாக வைத்து எம்மை பலவீனப்படுத்தினார்கள்.
முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்க நடந்த சதி தொடர்பில் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு அப்போது அறிந்துகொண்டதாகவும் அவர்கள் அது தொடர்பில் அறிந்துகொண்டு எம்மிடம் கூறும் போது விடயம் கை மீறி சென்றுவிட்டதாகவும், முஸ்லிம் மக்கள் பாரிய அளவில் எம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும்,எமது பக்க நியாயத்தை ஏற்கும் பக்குவத்தில் அவர்கள் அப்போது இருக்கவில்லை எனவும் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவின் பிரதாணிகள் அண்மையில் தான் பாகிஸ்தான் விஜயம் செய்தபோது தன்னிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
தற்போது மேற்குலகின் சதிக்குள் இலங்கை சிக்கிவிட்டதாகவும் அதிலிருந்து மீளும் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தேவையான சகல உதவிகளையும் செய்யும் என தன்னிடம் பாகிஸ்தான் உயர் தரப்பு குறிப்பிட்டதாக மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
பாறுக் ஷிஹான்-
(சம்பந்தப்பட்டவரை நான் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தன்னிலை விளக்கம் கேட்டேன் என்பதை கூறி அதை செய்தியாக்கியுள்ளேன்.)
ஊடகவியலாளர் சிவராம் கொலையில் தொடர்பு உள்ளதாகவும் இதனால் தான் அமைச்சுப் பதவிக் கோரிக்கையை நிராகரித்து...
முஸ்லீம் மக்களின் சம்மதம் கிடைக்கும் வரை வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலையே...
இலங்கை கிரிக்கட் அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு வைரஸ் நோய் தொற்றியுள்ளமையினால் நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
வைரஸ் நோய் தொற்றியுள்ளமையினால் 48 மணித்தியாலங்கள்...
ஆசியாவில் மிகவும் உயரமான கட்டிடத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து வேர்ல் கெப்பிடல் சென்றர் என்ற நிறுவனம் இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க உள்ளது.
இரண்டு கோபுரங்களை கொண்ட இந்த...
-ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 11.4 கிலோ மீற்றர் நீளமான பெரியமடு மகிளங்குளம்...