அம்­பாந்­தோட்டை  துறை­மு­கத்தை ஒரு­போதும் விற்­க­மாட்டோம்: அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க

அம்­பாந்­தோட்டை  துறை­மு­கத்தை ஒரு­போதும் விற்­க­மாட்டோம்.  துறை­முக ஊழி­யர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு  மனி­தா­பி­மான முறையில் தீர்­வினை பெற்­றுத்­த­ருவோம் என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்­துள்ளார்.

பல்­வே­று­பட்ட பிரச்­சி­னை­களுக்கு முகங் ­கொ­டுத்­துள்ள அம்­பாந்­தோட்டை மாகம்­புர துறை­முக திட்டம் மற்றும் அங்­குள்ள ஊழி­யர்­களின் பிரச்­சி­னை­களை ஆரா­யும்­பொ­ருட்டு துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க சென்­றி­ருந்த போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது. 

 மாகம்­புர துறை­மு­கத்தை விற்­ப­தற்கு ஒரு போதும்  நட­வ­டிக்கை  எடுக்­கப்­ப­டாது.   துறை­மு­கத்தின் பாது­காப்­பை உறுதி செய்து நாடு  முகங்­கொ­டு­கின்ற கடன் சுமையை குறைத்து தேசிய தேவைக்கு   முன்­னு­ரிமை வழங்கும் புதிய முத­லீட்டு திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.

இச்­செ­யற்­றிட்­டத்தின் பொழுது துறை­மு­கத்தில் பணி­யாற்­று­கின்ற அனைத்து ஊழி­யர்­க­ளி­னதும் தொழில் பாது­காப்­பை உறுதி செய்யும் வகையில் காணப்­ப­டு­கின்ற சட்ட சிக்­கல்­களை மனி­தா­பி­மான முறையில் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­யெ­டுக்­கப்­படும் என்று தெரி­வித்­துள்ளார்.

இதன்போது துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்துறை பிரதி அமைச்சர் நிசாந்த  முத்­து­ஹெட்­டி­கம, துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்துறை அமைச்சின் செய­லாளர் எல்.பி.ஜயம்­பதி, இலங்கை துறை­முக அதிகார சபையின் தலைவர் கலாநிதி  பராக்கிரம திசாநாயக்க,  அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் தலைவர் சுகத் ஹதுன்கே உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண் டுள்ளனர்.