ஆசியாவில் மிகவும் உயரமான கட்டடம் இலங்கையில்….

ஆசியாவில் மிகவும் உயரமான கட்டிடத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து வேர்ல் கெப்பிடல் சென்றர் என்ற நிறுவனம் இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க உள்ளது.

 

இரண்டு கோபுரங்களை கொண்ட இந்த கட்டிடம் உலகில் உயரமான கட்டிடங்களில் 9 வது கட்டிடமாகும்.625 மீற்றர் உயரத்தில் 117 மாடிகளை கொண்டதாக இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட உள்ளது. எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.