சீருடைக் கொடுப்பனவு வழங்குவதில் பாராபட்சம் !

bn_unfair
ஜஹான் எம். மஹ்ரூப் 
திருகோணமலை –குச்சவெளி பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் சீருடைக் கொடுப்பனவு வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு 4200 ரூபா பெறுமதியான சீருடை வழங்குவதற்கே மாகாண உள்ளுராட்சித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் குறித்த பிரதேச  சபையினால் 2000 ரூபா பெறுமதியான சீருடைகள் வழங்கி வைக்கப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சீருடை கிண்ணியாவில் தனக்கு வேண்டிய நிருவனத்தில் தைத்து வழங்கப்படுவதாகவும் அதில் முக்கிய பங்கு அங்கு கடமையாற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவருகிறது.
 மக்களுக்கு சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களின் வசதிகள் இப்படியான அதிகாரிகளால் தடைசெய்யப்படுவது மிக வருந்தத்தக்க விடயம்.
இது தொடர்பாக மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் கவனம் செலுத்த வேண்டும் என ஊழியர்கள் தெரிவிக்கின்னறனர்.