அரச சொத்துகளை எந்த வகையிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டாம் !!

logoஅரச சொத்துகளை எந்த வகையிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டாமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையின் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜினசிறி தடல்லகே தெரிவித்தார்.

இதேவேளை தேர்தல்கள் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு அமைய அனைத்து அரசாங்க ஊழியர்களையும் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்த முடியுமெனவும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.