சம்பூர் காணிப் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு த. தே. கூ மாபெரும் தேர்தல் வெற்றி : சம்பந்தன் !

Rajavarothayam Sambanthan

சம்பூர் காணிப் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் வெற்றிக்கான முதல் மணியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின் சம்பந்தன் ஊடகங்களுக்கு அளித்த விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சம்பூர் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டுவிட்டோம். இந்த நல்ல சகுனமே த.தே.கூட்டமைப்பு வடக்கின் மாபெரும் வெற்றியை ஈட்டி பேரம் பேசும் சக்தியாக மாறும் என்பதை காட்டுகிறது.