விமல் வீரவன்சவை ஒரு சதத்திற்கு கூட நாங்கள் மதிப்பதில்லை : சந்திரிகா !

 

chandrika_file_slg_xx-500x360

மீண்டும் அதிகாரத்திற்கு வரும் தேவை தனக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் செய்திருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனது 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (29) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களை சந்தித்தார்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மஹாநாயக்க தேரரை சந்தித்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் கலந்துரையாடிய பின்னர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்சி மஹாநாயக்க தேரரையும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது விமல் வீரவன்ஸ தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அதனை வேறு சந்தர்ப்பத்தில் பேசுவோம். விமல் வீரவன்சவை ஒரு சதத்திற்கு கூட நாங்கள் மதிப்பதில்லை. இன்று போல் சுப நாளில் அந்த பெயரை கூட கூற வேண்டாம் என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பதிலளித்தார்.