உதய சிறிக்கு உடன் தொழில் நியமனம் !

DSC_4821_Fotor

முதலமைச்சர் ஊடகப்பிரிவு 

கடந்த 14.02.2015 அன்று சித்தாண்டி, விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற யுவதி சீகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து கடந்த  மாதம் விடுதலையாகியிருந்தார்.

ஆனால் குறிப்பிட்ட யுவதிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அரச துறையில் தொழில் வாய்ப்பினை வழங்க இன்று உதய் சிறியிடம் இருந்து சுயவிபரக்கோவையைப் பெற்றுக்கொண்டார்.

குறிப்பிட்ட நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் ராஜேஸ்வரன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.