தொடரை சமன் செய்தது இலங்கை!

Sri Lankan batsman Dimuth Karunaratne bats against Pakistan during the fifth day of their second cricket test match in Colombo, Sri Lanka, Monday, June 29, 2015. Sri Lanka won the match by 7 wickets. (AP Photo/Eranga Jayawardena)

இலங்கை- பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான 2ஆவது டெஸ்ட் கொழும்பு பி.சர­வ­ண­முத்து மைதா­னத்தில் நடை­பெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டியது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்­னிங்ஸில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்­டங்­க­ளைப்பெற்றுக் கொண்டது.

பின்னர்  தனது முதல் இன்­னிங்ஸை தொடங்­கிய இலங்கை அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 315 ஓட்­டங்­களை பெற்றுக்கொண்டது.

177 ஓட்­டங்கள் பின்­தங்­கிய நிலையில்  தனது 2ஆவது இன்­னிங்ஸை ஆரம்­பித்த பாகிஸ்தான் அணி 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்­பிற்கு 171 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. அசார் அலி 64 ஓட்­டங்­க­ளு­டனும் யூனிஸ்கான் 23 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்­தனர்.

நேற்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்­கி­யது. தொடர்ந்து விளை­யா­டிய யூனிஸ்கான் மேலும் 17 ஓட்­டங்கள் எடுத்து 40 ஓட்­டங்­களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 22 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்து ஏமாற்றம் அளித்தார். முக்­கிய இரண்டு விக்­கெட்­டுகள் அடுத்­த­டுத்து இழந்­ததால் பாகிஸ்தான் அணி அதிக ஓட்­டங்கள் குவிக்கும் வாய்ப்பை இழந்­தது.

ஒரு­புறம் விக்கெட் டுகள் வீழ்ந்­தாலும் மறு­மு­னையில் அசார் அலி சிறப்­பாக விளை­யாடி சதம் பெற்றார். சதம் அடித்த அவர் 117 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க பாகிஸ்தான் அணி 2ஆவது இன்­னிங்ஸில் 329 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளை யும் இழந்­தது. இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் பிரசாத் நான்கு விக்­கெட்­டு­க­ளையும் சமீர மூன்று விக்­கெட்­டு­க­ளையும் வீழ்த்­தினர்.

இதையடுத்து பாகிஸ்தான்  அணி 152 ஓட்­டங்கள் அதிகம் பெற்­றுள்­ளதால் இலங்கை அணிக்கு 153 ஓட்­டங்கள் வெற்றி இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்டது.
இலங்கை அணி 2ஆவது இன்­னிங்ஸை ஆரம்­பிக்கும் முன் மழை குறுக்­கிட்­டது. அத்­துடன் 4ஆவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இதில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமால் ஐந்து பிடியெடுப்புகள் மற்றும் ஒரு ஸ்டம்பிங் மூலம் ஆறு பேரை ஆட்டமிழக்கச் செய்து சாதனைப் படைத்துள்ளார்.

Sri Lankan captain Angelo Mathews, right, congratulates Lahiru Thirimanne after defeating Pakistan by 7 wickets in their second cricket test match in Colombo, Sri Lanka, Monday, June 29, 2015. (AP Photo/Eranga Jayawardena)

இந்நிலையில் 5 ஆவதும் இறுதிநாளுமான இன்று காலநிலை சற்று மப்பும்மந்தாரமான நிலையில் காணப்பட்டது. இலங்கை அணியின் வெற்றிக் கனவை மழை குறுக்கிட்டு தகர்க்குமோ என்ற அச்சம் நிலவியது.

மழை குறுக்கிட்டு போட்டி தடைபடுமோ என்ற அச்சத்துடன் களமிறங்கிய இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மாத்திம் இழந்து வெற்றிக்கு தேவையான 153 ஓட்டங்களை பெற்று 2 ஆவது டெஸ்ட் போட்டியை தன் வசப்படுத்தியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி பல்லேகலையில் ஆரம்பமாகவுள்ளது.