நகரைச் சுத்தப்படுத்துவோம் – முதலமைச்சர்,அமைச்சர்கள் கலந்து கொண்ட சிரமதான நிகழ்வு !

DSC04210_Fotor
 முதலமைச்சர் ஊடகப் பிரிவு 
 நகரைச் சுத்தப்படுத்துவோம், சூழலைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இன்று திருகோண மலையில் கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு இன்று காலை 10.30 க்கு ஆளுணர் காரியத்திற்கு முன்னால்  ஆரம்பமானது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கல்வி அமைச்சர் தண்டாயுத பாணி, வீதி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், ஜே. ஜனார்தனன் ஆகியோரும் மாகாண பிரதம செயலாளர், மற்றும் முதலமைச்சின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், சுகாதார திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள், சாரணர்கள், இராணுவத்தினர்கள், என்று பலரும் கலந்து கொண்டு நகரைச் சுத்தப்படுத்துவோம் நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

DSC04232_Fotor  DSC04248_Fotor

DSC04247_Fotor