வரலாற்று ஆய்வாளர் ஜலீல் ஜீக்கு ”இரத்தின தீபம் விருது ” வழங்கி கெளரவிப்பு…!

 

சப்னி

மூக சேவை, கலை இலக்கியம் , ஆய்வியியல் , ஊடகவியல் போன்ற துறைகளில் பணியாற்றிவரும் எமது இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பின் நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளரும் , அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் பொதுச் செயலாளருமான ; தேசமாண்ய ஜலீல் ஜீ அவர்கள் கண்டி மாநகரில் பொன்னாடை போர்த்தி , பதக்கம் அணிவித்து , விருதும் சான்றிதழும் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

மலையக‌ கலை இலக்கிய மன்றம் -கண்டி கெப்பட்டி பொல – ஞாபகார்த்த மண்டபத்தில் 2015.06.28 ஏற்பாடு செய்திருந்த ” இலங்கையில் புகழ் பெற்ற சமூக சேவை-கலை இலக்கியவாதிகளினை ” பாராட்டிக் கௌரவிக்கும் தேசிய நிகழ்வின் போது வரலாற்று ஆய்வாளர் ஜலீல் ஜீ “கௌரவ இரத்தின தீபம் விருது” விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட -உலகப் புகழ் சுழற்பந்து வீச்சாளர் ; முத்தையா முரளிதரனின் தகப்பனார் சமூக ஜோதி முத்தையா அவர்களினாலும் ஏனைய கௌரவ அதிதிகளினாலும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

11650982_495655933917528_8567507_n_Fotor 11653350_495655903917531_154443382_n_Fotor 11655414_495656073917514_1497516997_n_Fotor