இளைஞர்களுக்கான இரவு நேர விஷேட தர்பிய்யா நிகழ்வு!

 
பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யாவின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ்ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையோடு ‘இளைஞர்களுக்கான இரவு நேர விஷேட தர்பிய்யா நிகழ்வு’ கடந்த 26.06.2015 வெள்ளிக்கிழமை  காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா அறபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மேற்படி தர்பிய்யா நிகழ்வில் காத்தான்குடியில் இயங்கிவரும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம், இஸ்லாமிய இளைஞர் முன்னணி, இஸ்லாமிக் சென்றர்,  யூஸ் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் , லஜ்னதுஸ்ஸுன்னாவின் இளைஞர் அணி போன்ற அமைப்புக்களைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் எனும் தலைப்பில்  அஷ்ஷெய்க்.  ஏ.எல்.எம். முஜாஹித் (சலபியும் , அல்லாஹ்வின் அருட்கொடைகள் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க். எம்.ஐ.எம். பஷீர் (மதனியும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
இங்;கு தொடர்பாடல் திறண்கள் பற்றிய போட்டி நிகழ்ச்சிகள், அல்குர்ஆன் ஹல்கா மற்றும் குழுச் செயற்பாடு போன்றவை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
DSC06180_Fotor DSC06200_Fotor DSC06208_Fotor DSC06156_Fotor