-றமழான் மாத 10 நாள் விஷேட நிகழ்வில் கிழக்குமாகாண முன்னாள் அமைச்சர் பிரதம அதிதியாக பங்கேற்பு!

6_Fotorஅபு அலா 

அல் இபாதா கலாசார மன்றத்தின் 4 வது வருட றமழான் மாத ஹதீஸ் மஜ்லிஸின் 10 நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உறுப்பினருமாகிய எம்.எஸ்.உதுமாலெப்பை இன்றைய நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
றமழான் மாத 10 நாள் விஷேட பயான் நிகழ்த்தப்பட்டு அந்த பயான் நிகழ்விலிருந்து இறுதியில் கேள்வி கேட்கப்பட்டு விடையளித்தவர்களில் மூன்று பேர் குழுக்கள் முறை மூலம் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
1-2_Fotor 4_Fotor