பிரதமர் வேட்பாளராக தன்னுடைய பெயரை முன்மொழியாவிட்டால் …..

 mahinda
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக தன்னுடைய பெயரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முன்மொழியாவிட்டால் அது குறித்து தான் அன்றைய தினம் பார்த்துக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
 கண்டி ஸ்ரீ தலமா மாளிகையில் இன்று வழிபாட்டில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ, அதன்பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இம்முறை அக்கட்சியின் சார்பில் வேட்புமனு வழங்கப்படப்போவதில்லை என்ற வதந்தி நிலவுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த மஹிந்த, ‘அது தொடர்பில் இனிவரும் நாட்களில் பார்த்துக்கொள்வோம்’ என்றார்.