தலவாக்கலை பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

Unknownதலவாக்கலை பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலவாக்கலை பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் மக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இம்மழை காரணமாக தலவாக்கலை நகர்ப் புறங்களில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்துள்ளதையும் காணமுடிகிறது. தலவாக்கலை மேல்கொத்மலை திட்டத்தை அண்டிய பகுதிகளில் கடுங்குளிர் காலநிலை காணப்படுவதால் இப்பிரதேச மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர்.