எரிக் சொல்ஹெய்ம், இலங்கை மீது மீண்டும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் !

Eric-solheim

 நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர்  எரிக் சொல்ஹெய்ம், இலங்கை மீது மீண்டும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2002 -2004ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கிடையில் சமாதான செயற்பாடுகளை, சொல்ஹெய்ம் முன்னெடுத்திருந்தார்.

 அண்மையில், இலண்டன் நகரில் இடம்பெற்ற உலக தமிழர் அமைப்பினர் – இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சொல்ஹெய்ம் கலந்துகொண்டார்.

 இதன்போது, தமிழ் டயஸ்போரா அமைப்பினருடன் செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பில் தமது அனுபவங்ககை கொண்டு சொல்ஹெய்ம் விளக்கமளித்தார். இவ்வாறு, அமைச்சர்  மங்கள சமரவீர, நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும் போது, தெரிவித்துள்ளார்.