ஜே.வி.பி தனித்து போட்டியிடவுள்ளது !

JVP-LOGO-1 
 அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் தனித்து செயற்படபோவதாக மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) அறிவித்துள்ளது.

 அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடையில் உள்ள பொருட்கள் விஷம் கலந்தவை என்றும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கடையில் உள்ள பொருட்களை நம்பமுடியாது என்று மக்கள் விடுதலை முன்னணி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுக்கு கூறியது என்று முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அதேபோல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடையில் உள்ள பொருட்களை நம்பமுடியாது என்றும் கடந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்ட கூட்டணி ஆட்சியின் பொருட்களும் நம்பிக்கையில்லாதவை என்றும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களுக்கு தெளிவுப்படுத்துவோம் என்றார்.