2 இலட்சம் கையெழுத்து பெற்றுக்கொள்ளும் வேட்டை அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது !

DSC03362_Fotor

அபு அலா 

வன்னி முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடை செய்யும் இனவாதிகளின் சூழ்ச்சிக்கு எதிரான 2 இலட்சம் கையெழுத்து பெற்றுக்கொள்ளும் வேட்டை இன்று (12) வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில், அம்பாறை அட்டாளைச்சேனை பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை பெரும் நிகழ்வு இன்று மதியம் அட்டாளைச்சேனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்றது.

இதில் ஆயிரத்துக் மேற்பட்ட பொதுமக்கள் வன்னி முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடை செய்யும் இனவாதிகளுக்கு எதிராக தங்களின் கையெழுத்தினை இட்டனர்.

முஸ்லிம் சமுகத்துக்கான எதிர்வுகளை முறியடிக்கும் நோக்கில் இங்கு யார் எந்த கட்சி என்ற பாகுபாடின்றி பொதுமக்கள் தங்களின் கையெழுத்துக்களை இட்டமையும் குறிப்பிடத்தக்கது.

DSC03357_Fotor