புலம்பெயர்ந்த இலங்கையருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை !

புலம்­பெ­யர்ந்த இலங்­கை­யர்கள் 150 பேருக்கு நேற்­று இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டது. கொழும்பு கோட்­டை­யி­லுள்ள வெளிவி­வ­கார அமைச்சின் பிர­தான கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­ற இந்த நிகழ்­வில் வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, மக்கள் பாது­காப்பு மற்றும் கிறிஸ்­தவ மத விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­டனர்.
புலம்­பெ­யர்ந்த இலங்­கை­யர்கள் 150 பேருக்கு வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஜோன் அம­ர­துங்­கவும் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை சான்­றி­தழ்­களை வழங்கி வைத்­தனர்.

மேலும் இதன்­போது இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை பெற்­ற­வர்கள் எழுந்து நின்று சத்­தி­யப்­பி­ர­மா­ணமும் செய்து கொண்­டனர். இலங்­கையின் பிர­ஜா­வு­ரிமை தொடர்பில் 1948 ஆம் ஆண்டின் போதே சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. குறித்த சட்ட நிறை­வேற்­றத்தின் பிர­காரம் 18 ஆம் இலக்க சட்­ட­மூலம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதே­வேளை இலங்­கையில் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை 1987 ஆம் ஆண்டே இலங்­கையில் அறி­முகம் செய்து வைக்­கப்­பட்­டது. அந்த வரு­டத்தின் போது பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட 45 ஆவது இலக்க சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்கல் செயற்­திட்டம் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. இதன்­படி குறித்த சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­தி­லி­ருந்து இது­வ­ரையில் சுமார் 34 ஆயிரம் பேருக்கு இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது.

எனினும் 2011 ஆம் ஆண்­ட­ளவில் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்கல் அர­சாங்­கத்­தினால் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டது. இதன்­படி சுமார் நான்கு ஆண்­டுகள் இரட்­டைப்­பி­ரஜாவுரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடி­யாத நிலைமை காணப்­பட்­டது.

எவ்­வா­றா­யினும் புதிய அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்­டத்தின் பிர­காரம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யுடன் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை மீள வழங்­கு­வ­தற்கு ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

இந்­நி­லையில் இது­வ­ரைக்கும் 2000 விண்­ணப்­பங்கள் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரி­மைக்கு கிடைக்­கப்­பெற்­றாலும் புதிய ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் முதலில் விண்ணப்பம் செய்த 450 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமையவே நேற்று மேலும் 150 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது