வடக்கில் 6 சிவிலியன்­க­ளுக்கு ஒரு இரா­ணுவ வீரர் என்ற விகி­தத்­தில் சுமார் 150 000 இரா­ணு­வத்­தினர் : சி.வி. !

vikneswaran-

எமது மாகா­ணத்­தி­லி­ருந்து இராணுவம் வெளியேற்­றப்­பட வேண்டும் என்­ப­தையே நாம் விரும்பு­கிறோம். கிட்டத்­தட்ட 150 000 இரா­ணு­வத்­தினர் வடக்கில் இருக்கி­றார் கள். 6 சிவிலியன்­க­ளுக்கு ஒரு இரா­ணுவ வீரர் என்ற விகி­தத்­தில் உள்­ளனர்.
இது எமக்கு பாரிய தடையாக உள்­ளது. நீண்­ட­கா­ல­மாக இரா­ணு­வத்தினர் இருப்பதால் பாரிய பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன.  பெண்­களின் பாது­காப்­புக்கும் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது என்று வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். 

அவர்­களில் எனது நண்­பர்­களும் இருக்­கி­றார்கள். அவர்கள் என்னை சந்­திக்க வரு­வதும் உண்டு. ஆனால் அவர்கள் வர்த்­தகம் செய்­கின்­றனர். மீன்­பிடித் தொழி லில் ஈடு­ப­டு­கின்­றனர். இது யாழ்ப்­பா­ணத்தின் மக்கள் வாழ்க்­கைக்கு பாரிய தடை­யாக உள்­ளது என்றும் வடக்கு முத­ல­மைச்சர் குறிப்­பிட்டார்.

வட மாகா­ணத்தில் போதைப்­பொருள் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்­து­வது எவ்­வாறு எனும் தொனிப்­பொ­ருளில் ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ளதேசிய அபா­ய­கர ஔட­தங்கள் கட்­டுப்­பாட்டுச் சபையில் விசேட கலந்­து­ரை­யாடல் நேற்று நடை­பெற்­றது. அந்தக் கலந்­து­ரை­யா­டலின் பின்னர் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே வடக்கு முதல்வர் இந்த விட­யத்தை முன்­வைத்தார்.

அமைச்சர் ஜோன் அம­ர­துங்க தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் வடக்கு முதல்வர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

வட­மா­கா­ணத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாத்­துக்கு பிற­குதான் போதைப்­பொருள் பாவனை அதி­க­ரித்­துள்­ளது. அதற்கு முன்பு போதைப் பொருள் பாவனை அங்கு இருக்­க­வில்லை.
இரா­ணு­வத்தின் நிர்­வா­கத்­தின்கீழ் வட­மா­காணம் இருந்த காலத்­திலே அங்கு போதைப் பொருள் பாவனை பாரி­ய­ளவில் அதி­க­ரித்­தது.இதற்கு இரா­ணு­வத்­தி­னரே பதில் கூற­வேண்டும்.
வட­மா­கா­ணத்தில் போதைப் பொருள் பாவனை அதி­க­ரித்து வரு­கின்­றது. புலி­களின் காலத்தில் போதைப்­பொருள் பாவனை அங்கு இருக்­க­வில்லை. 2009 மே மாதத்­துக்கு பின்­னர்தான் இந்த பாவ­னைக்கு அங்­குள்ள மக்கள் பழக்­கப்­பட்­டார்கள்.

வடக்கு மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் கடந்த 30 வருட காலம் பல்­வேறு இன்­னல்­களை அனு­ப­வித்­தி­ருக்­கி­றார்கள். அத்­தோடு தொழில்­வாய்ப்­பின்­மையும் அவர்­க­ளுக்கு பிரச்­சி­னை­யாக உள்­ளது. இவ்­வா­றா­ன­வர்கள் மிக இல­கு­வாக போதை பழக்­கத்­துக்கு உள்­ளா­கி­றார்கள்.

உள்­நாட்­டி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து வெளி­நா­டு­களில் வாழும் இளை­ஞர்கள் பலர் தமது வாழ்க்­கையை சிறப்­பாக முன்­னெ­டுக்­கி­றார்கள். ஆனால் உள்­நாட்டில் போதி­ய­ளவு விழிப்­பு­ணர்வு இல்­லாமை, கல்வி, அறிவு, இல்­லாமை, தொழில்­வாய்ப்­பின்மை போன்­ற­வற்றால் வழி தவ­று­கி­றார்கள்.

அத்­துடன் வட­மா­கா­ணத்தில் போதைப் பொருள் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்தும் பொருட்டு வாரத்தில் ஒரு­முறை பாட­சா­லை­களில் விழிப்­பு­ணர்வு நிகழ்ச்சித் திட்­டங்­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டி­ருக்­கிறோம். பாட­சா­லை­களில் இடம்­பெறும் காலைக் கூட்­டங்­களில் இவ்­வி­வ­காரம் தொடர்­பாக வைத்­தி­யர்கள் போன்றோர் கருத்­துக்­களை பகிர முடியும்.

அங்கு மாண­வர்­க­ளுக்கு கேள்வி கேட்­ப­தற்­கான சந்­தர்ப்­பமும் வழங்­கப்­ப­ட­வேண்டும். அத­னூ­டாக மாண­வர்­களின் உள­ரீ­தி­யான விட­யங்­களைஇபிரச்­சி­னை­களை புரிந்­து­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். அத்­துடன் தேவைப்­படும் மாண­வர்­க­ளுக்கு ஆலோ­ச­னை­களை வழங்க வைத்­தி­யர்கள் உள்­ள­டங்­க­ளாக ஆலோ­சனைப் பிரிவு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

மேலும் பொலி­ஸா­ருக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடையில் சிறந்த உறவு கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கும் பொது மக்­க­ளுக்கும் இடையில் சுமு­க­மான உறவு காணப்­ப­டு­கி­றது. அவர்­க­ளி­னூ­டாக மக்கள் பிரச்­சி­னையை பொலி­ஸா­ருக்கு கொண்­டு­செல்ல முடியும். அதன் முதற்­கட்­ட­மாக பொலி­ஸா­ருக்கும் மாகாண அமைச்­சுக்கும் இடையில் காத்­தி­ர­மான உறவு கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டி­யது குறித்து நான் பொலிஸ்மா அதி­ப­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன்.

பிரதிப் பொலிஸ்மா அதி­பர்­க­ளுக்கும் எமது மாகாண சபையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்சர் குழு­வுக்கும் இடையில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வது தொடர்­பிலும் ஆராய்ந்­தி­ருக்­கிறோம்.என்றார். இதன்­போது யாழ்ப்­பா­ணத்தின் தற்­போ­தைய நிலை­மையை சொல்ல முடி­யுமா? என முத­ல­மைச்­ச­ரிடம் உள்­துறை அமைச்சர் ஜோன் அம­ர­துங்க கேட்­ட­தற்கு பதி­ல­ளித்த வடக்கு முதல்வர்,

எமது மாகா­ணத்­தி­லி­ருந்து இரா­ணுவம் வெளி­யேற்­றப்­பட வேண்டும் என்­பதை நாம் விரும்­பு­கிறோம். கிட்­டத்­தட்ட 150000 இரா­ணு­வத்­தினர் அங்கு இருக்­கி­றார்கள். . அவர்கள் என்னை சந்­திக்க வரு­வதும் உண்டு. 6 சிவி­லி­யன்­க­ளுக்கு ஒரு இரா­ணுவ வீரர் வீதம் உள்­ளனர்.

இது எமக்கு பாரிய தடை­யாக உள்­ளது. நீண்­ட­கா­ல­மாக இரா­ணு­வத்­தினர் இருப்­பதால் பாரிய பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன. பெண்­களின் பாது­காப்­புக்கும் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களில் எனது நண்­பர்­களும் இருக்­கி­றார்கள் ஆனால் அவர்கள் வர்த்­தகம் செய்­கின்­றனர். மீன்­பிடி தொழிலில் ஈடு­ப­டு­கின்­றனர். இது யாழ்ப்­பா­ணத்தின் மக்கள் வாழ்க்­கைக்கு பாரிய தடை­யாக உள்­ளது.

யாழில் மாணவி படு­கொலை செய்­யப்­பட்­டதன் பின்னர் பாரிய ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றன. அச்­சம்­ப­வத்­தினால் மக்கள் அதிர்ச்­சி­ய­டைந்­தார்கள். அந்த சம்­பவம் நடத்­தப்­பட்ட கொடூர முறை தொடர்பில் அவர்களுக்குள் அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் அரசியல் தலையீடுகளும் இருந்தன. கடந்த தேர்தலில் தோல்வியுற்ற சிலர் இப்பிரச்சினையை பூதாகரமாக ஆக்குவதற்கு முயற்சித்தார்கள்.

நீதிமன்றுக்கு கல் எறிவதற்கு யார் விருப்பப்படுவார்கள்.? அது குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற சிலரின் முயற்சி. அவ்வாறானவர்களின் செயற்பாடுகள் காரணமாக அங்கு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 130 பேர் கைது செய்யப்பட்டார்கள்.இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்என்றார்