இலங்­கையில் தனித் தமி­ழீ­ழத்தை உரு வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டுகின்­றன : விமல் !

 

z_p05-good0

 இலங்­கையில் தனித்­த­மி­ழீழ ராஜ்­ஜி­யத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக மங்­கள சம­ர­வீர, சொல்ஹெய்ம் மற்றும் இமா­னுவேல் பாதி­ரியார் தலை­மையில் புலி ஆத­ர­வா­ளர்­களின் சர்­வ­தேச பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக மஹிந்த அணி ஆத­ரவு எம்.பியான விமல் வீர­வன்ச குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார்.

ஓரினச் சேர்க்­கைக்கு ஐ.நா.வில் ஆத­ரவு வழங்­கிய இந்த அரசு மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் நாட்டின் கலா­சாரம் அழிந்­து­விடும் என்றும் அவர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

கொழும்பு நார­ஹேன்பிட்டி அபே­ராம விகா­ரையில் நேற்று திங்­கட்­கிழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட் டில் உரை­யாற்றும் போதே விமல் வீரவன்ச எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

அர­சாங்­கத்­துடன் சுமந்­திரன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி கடு­மை­யான குற்­றங்­க­ளில் குற்­ற­வா­ளி­க­ளான 300 விடு­த­லை­ப்புலி பயங்­க­ர­வா­தி­களை விடு­தலை செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுத்­துள்ளார்.

மறு­புறம் இலங்­கையில் தனித் தமி­ழீ­ழத்தை உரு ­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு கின்­றன.இதற்­காக வெளி­நா­டு­களில் பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

மங்­கள சம­ர­வீர நோர்­வேயின் சொல் ஹெய்ம் மற்றும் இம்­மா­னுவேல் பாதி­ரியார் உட்­பட புலம்­பெயர் புலி ஆத­ர­வா­ளர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகளை நடத்­தி­யுள்ளார்.இதற்­காக இங்கு தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வென முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகாவை நிய­மித்துள்­ளனர்.

இறுதி கட்ட யுத்தம் தொடர்­பாக உள்­நாட்டு விசா­ரணை என்ற பெயரில் யூ.என்.எச்.சி.ஆர்.தலை­மையின் கீழ் எமது படை­யி­ன­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
இந்த விசா­ர­ணை­களின் இறு­தியில் வடக்கில் இனப்­ப­டு­கொலை இடம்­பெற்­றது என்ற தீர்­மா­னமே எடுக்­கப்­படும்.இதன் பின்னர் தமி­ழர்கள் பிரிந்து தனி­யாக வாழ வேண்டும் என்ற கோரிக்­கைக்கு சர்­வ­தேசம் ஆத­ரவு வழங்கும்.

அதன் பின்னர் சர்­வ­தே­சத்தின் ஆத­ர­வுடன் தனித் தமி­ழீழ ராஜ்­ஜியம் உரு­வாகும்.இதற்­கா­கவே அர­சாங்கம் புலம்­பெயர் புலி ஆத­ர­வா­ளர்­க­ளுடன் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் சுமந்­தி­ரனின் ஆத­ர­வுடன் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்­துள்­ளது.

இவ்­வாறு நாட்டை பிரிக்கும் பயங்­க­ர­மான சூழலை ஏற்­ப­டுத்தும் முயற்­சியில் ஈடு­ப­டு­வ­தோடு நான்கு இலட்சம் புலம்­பெயர் புலி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு இலங்­கையில் பிர­ஜா­வு­ரிமை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கி­றது.

இவ்­வாறு பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்ட நாட்டை மீண்டும் பயங்­க­ர­வா­தத்­திற்கு தாரை­வார்ப்­ப­தற்­கான நட­ வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஓரினச் சேர்க்கை

எமது நாடு கலை, கலா­சார, பண்­பாடு மிகுந்­த­தாகும். இன்று அதற்கும் ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது.ஐ.நா.வில் ஓரினச் சேர்க்கைக்கு இவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இது எமது நாட்டின் கலாசாரத்தை அழித்தொழிக்கும் ஏற்பாடாகும். இதற்கு இடமளிக்கப் போகின்றீர்களா? அடுத்த தேர்தலில் இந்த அரசாங்கம் வெற்றி பெற்றால் நாடு பிரியும் எமது கலாசாரம் சீரழியும் என்று தெரிவித்தார்.