ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி கண்டுபிடிப்பு !

 

images (1)முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவிராஜ் கொலை செய்­யப்­படுவதற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் முச்­சக்­க­ர­வண்­டி­யொன்றை குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

 

ரவிராஜ் கொலை தொடர்பில் கடற்­ப­டை­யினர் உள்­ளிட்ட ஐவரை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­துள்ள நிலையில் அவர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த விசா­ர­ணை­களின் அடிப்­ப­டை­யி­லேயே குறித்த முச்­சக்­கர வண்டி கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

நேற்­றய தினம் அது தொடர்பில் கொழும்பு மேல­திக நீதவான் நிரோஷா பெர­ணான்­டோ­விடம் மேல­திக விசா­ரணை அறிக்­கையை தாக்கல் செய்த குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் முச்­சக்­க­ர­வண்டி தொடர்பில் மேல­திக விசா­ர­ணைகள் மற்றும் சோத­னை­களை முன்­னெ­டுக்க அனு­மதி பெற்றுக் கொண்­டனர்.

இந்­நி­லையில் ரவிராஜ் கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள 5 சந்­தேக நபர்­க­ளையும் எதிர்­வ­ரும 19 ஆம் திகதி வரை விளக்க மறி­யலில் வைக்க நீதவான் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.இது தொடர்பிலான வழக்கு மீண்டும் எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.