‘இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்துவதை ஏற்க முடியாது’-ஐரோப்பிய ஒன்றியம்

 

இலங்­கையில் மரண தண்­டனை அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என ஐரோப்­பிய ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது.எவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லை­யிலும் மரண தண்­ட­னையை மீண்டும் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என அந்த அமைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
ஏற்­க­னவே ஆட்­சியில் இருந்த அர­சாங்­கங்­க­ளுக்கும் மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்த வேண்டாம் என ஐரோப்­பிய ஒன்­றியம் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது. இந்­நி­லை­யி­லேயே தற்­போ­தைய அர­சாங்­கத்­தி­டமும் அதனை கோரு­வ­தாக ஐரோப்­பிய ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் ஆட்சி காலத்­திலும் மரண தண்­டனை அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வது குறித்து அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் போதைப்­பொருள் பயன்­ப­டுத்­து­வோ­ருக்கு எதி­ராக மரண தண்­டனை அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வது தொடர்பில் கவனம் செலுத்­தப்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு அறி­வித்­தி­ருந்தார்.

இதே­வேளை, ஏற்­க­னவே நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்­ ஷவும் மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்த தயங்­கப்­போ­வ­தில்லை என தெரி­வித்­தி­ருந்தார். இலங்­கையில், மிக நீண்ட கால­மாக மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டாத சூழ்­நி­லையில், நாட்டில் தொடர்ந்தும் இடம்­பெற்று வரும் பாலியல் குற்றச்செயல்கள் மற்றும் கடத்தல்களை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர் ஆகியோர் இவ்வாறான கருத்துக் களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.