ஐந்து எம்பிகள் பிரதி அமைச்சர்களாக….

images (2)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் பிரதியமைச்சர்களாக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால, டுலிப் விஜேசேகர, விஜய தஹாநாயக்க, எரிக் வீரவர்தன, விக்டர் அந்தோனி ஆகியோரே ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அமைச்சரவை அமைச்சராகவும், மூன்று பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், ஒருவர் பிரதியமைச்சராகவும் ஏற்கெனவே பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.