ரவி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக விவாதத்துக்கு எடுக்க வேண்டும் !

 

நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்கு எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­து­கின்றோம். அதே­வேளை பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கும் கையொப்­பங்கள் சேர்க்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. விரைவில் அத­னையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்போம் என்று சுதந்­திரக்கட்­சியின் தேசிய அமைப்­பாளர் சுசில் பிரேம்­ஜ­யந்த தெரி­வித்தார்.

நாங்கள் பின்­க­தவால் பிர­த­மரை நிய­மிக்க முயற்­சிக்­க­வில்லை. ரணில் விக்­கிர­ம­சிங்­கவே பின்­க­த­வினால் பிர­த­ம­ரா­கி­யுள்ளார் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். சுசில் பிரேம்­ஜ­யந்த அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

பாரா­ளு­மன்­றத்தில் அர­சி­ய­ல­மைப்பு பேர­வையை நிறு­வு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. ஆனால் பிர­த­மரின் சார்பில் அமைச்சர் ஒருவர் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளமை ஒரு சிக்­கலை தோற்­று­வித்­துள்­ளது. அதா­வது சட்­டத்தின் படி எந்த சிக்­கலும் இல்லை. ஆனால் பண்­பியல் ரீதி­யாக சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. அது மட்­டு­மன்றி சிவில் சமூக பிர­தி­நி­தி­களின் நிய­மனம் தொடர்பில் ஏனைய கட்­சி­களின் ஆலோ­சனை பெறப்­ப­ட­வில்லை. எனினும் அனைத்து விட­யங்­களும் சுமு­க­மாக இயக்­கப்­பட்டு அர­சி­ய­ல­மைப்பு பேரவை நிறு­வப்­படும் என்று நம்­பு­கின்றோம். எனினும் இதில் சில சிக்­கல்கள் நில­வு­கின்­றன.

இதே­வேளை பின்­க­த­வினால் எதிர்க்­கட்­சியின் பிர­தமர் ஒரு­வரை நிய­மிப்­ப­தற்கு முயற்­சிப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க கூறி­யுள்ளார். ஆனால் நாங்கள் பின்­க­தவால் பிர­த­மரை நிய­மிக்க முயற்­சிக்­க­வில்லை. ரணில் விக்கி­ர­ம­சிங்­கவே பின்­க­த­வினால் பிர­த­ம­ரா­கி­யுள்ளார் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது. எம்­மி­டமே பெரும்­பான்மை பலம் உள்­ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரே பிர­த­ம­ராக முடியும். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் அல்­லா­த­வரை பிர­த­ம­ராக்க முடி­யாது.

இதே­வேளை அர­சாங்­கத்­துக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை உரு­வாக்­கி­வ­ரு­கின்றோம். அதற்கு தற்­போது கையொப்­பங்கள் சேகரிக்கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. கையொப்­பங்கள் சேகரிக்கப்­பட்­டதும் அதனை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்போம்.