அதிகாலையில் கொழும்பு – யாழ் பஸ் விபத்தில் நான்கு பேர் பலி : 35 பேர் காயம் !

murukandu_02_0

முல்லைத்தீவு  மாங்குளம் – கிழவன்குளம் பகுதியில்  இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வண்டியுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியின் தூக்க மயக்கமே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

murukandu_03 murukandu_01_0 bus-accident-pdz