ஏனைய மதங்­க­ளையும் கலா­சாரங்­க­ளையும் மதித்து சக­வாழ்வு வாழ்­வ­தற்கு எம்­மை­ த­யா ர்­ப­டுத்திக்கொள்வோம் – பிரதமர் !

வெளிப்­பார்­வைக்­காக மதக் கிரி­யை­களில் ஈடு­ப­டாது உண்­மை­யான தர்­மத்தின் கருத்­துக்­களால் எமது வாழ்க்­கையை வளப்­ப­டுத்திக் கொள்வோம். முன்­மா­தி­ரி­மிக்க வகையில் ஏனைய மதங்­க­ளையும் கலா­சாரங்­க­ளையும் மதித்து சக­வாழ்வு வாழ்­வ­தற்கு எம்­மை­ த­யா ர்­ப­டுத்திக்கொள்வோம்.

ranil-wickramasinghe-1-colombo-telegraph

அனைத்து உள்­ளங்­களும் தெளிவுபெறக்­கூ­டிய பக்­தி­க­மழும் பொசன் பண்­டி­கை­யாக அமையப் பிரார்த்­திக்­கின்றேன் என்று பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

பொசன் தினத்தை முன்­னிட்டு வெளி­யி ட்­டுள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்­தியில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது கீழைத்­தே­யத்தில் தோன்­றி­ய­ மிகச் சிறந்­த­ஆன்­மீகத் தத்­து­வத்தை எம­து தாய் நாட்டின் உரி­மை­யாக அன்­ப­ளிப்புச் செய்த புனித தின­மா­க நாம் பொசன் போயா­தி­னத்தை கொண்­டா­டு­கின்றோம். அசோக மன்­னனின் தர்ம தூதுப் பணியின் முக்­கிய அம்­ச­மாக மஹிந்த தேரர் உட்­பட்ட தூதுக்­கு­ழு­வினர் பௌத்­த­ தர்­மத்தை இந்­த­ நாட்­டிற்கு அன்­ப­ளிப்புச் செய்­த­மை­யா­னது எம­து­ தே­சத்­தி­னதும் கலா­சா­ரத்­தி­னதும் புதி­ய­தொ­ரு­யுகம் ஆரம்­ப­மா­கிய வர­லாற்றுப் புகழ்­மிக்க நிகழ்­வாகும்.

அடிமைத் தன­மற்ற சிந்­தனை, அஹிம்சை, கருணை என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட புனித பௌத்த தர்­ம­மா­னது வேட்­டை­யாடச் சென்­றி­ருந்த மன்னன் தேவ­நம்­ பி­ய­தீசன் உட்­பட முழு இலங்கை மக்­க­ளையும் மும்­ம­ணி­களின் ஆசி­யை­வேண்­டி­நிற்கும் பக்­தி­மிக்க மக்­க­ளாக மாற்­றி­ய­மைப்­பதில் வெற்­றி­கண்­டது. பௌத்த தர்­மத்தின் மூலம் ஏற்­பட்ட புத்­து­யிர்ப்­பா­னது மனி­தர்­களின் உள்­ளத்­துடன் மட்டும் வரை­ய­றுக்­கப்­ப­டாமல் நாட்டின் ஆட்சித்துறை, இலக்­கியத்துறை, விவ­சாயத் துறை, நீர்ப்­பா­சனத் துறை­போன்­ற­து­றைகள் உட்­ப­ட நா­டு­மு­ழு­வ தும் வியா­பித்­தது.

பௌத்த தர்­மத்தைப் பரப்­பு­வ­தற்­காக உலகில் எந்­த­வொரு இடத்­திலும் ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­ வில்லை. ஏனைய மதங்­க­ளுக்கும் கலா­சா­ர ங்­க­ளுக்கும் மதிப்­ப­ளித்து சக­வாழ்வு வாழ்­வ­தற்குப் பொருத்­த­மான சூழலை உரு­வாக்கும் மதங்கள் மற்றும் மார்க்­கங்­க­ளி­டையே பௌத்த தர்மம் தனித்­து­வ­மா­ன­தாக விளங்­கு­கின்­றது.

ஆனாலும்,தீவி­ர­வாதக் கருத்­துக்கள்,பொறுப்­பற்­ற­செ­யற்­பா­டுகள், வன்­முறை நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக அண்மைக்காலங்­களில் பௌத்த மதத்தின் தார்­மீக சிந்­த­னைகள் மற்றும் கரு­ணையை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அஹிம்சைப் போக்கு என்­பன சவா­லுக்­குட்­பட்­டி­ருப்­பது கவ­லைப்­ப­ட­வேண்­டி­ய ­வி­ட­ய­மாக இருக்­கின்­றது.
இந்­த­நி­லை­மை­யை­ மாற்­றி­ய­மைப்­ப­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­வது எம்­ம­னை­வ­ரி­னதும் பொறுப்­பாகும்.