பிர­தமர் வேட்­பா­ள­ராக அன்றி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்­கான வேட்­பா­ள­ராக மஹிந்த ராஜ­பக்ஷ போட்­டி­யி­டுவார் – டிலான் பெரேரா !

images

 எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் நாங் கள் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கியே தீருவோம். அதற்­கான இணக்­கப்­பாடு தற்­போது பெறப்­பட்­டுள்­ளது. பிர­தமர் வேட்­பா­ள­ராக அன்றி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்­கான வேட்­பா­ள­ராக மஹிந்த ராஜ­பக்ஷ
போட்­டி­யி­டுவார் என்று சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க அர­சி­ய­லமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­டத்தை நிறை­வேற்­றா­விடின் அவருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்­டு­வந்து ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தைத் தோற்­க­டித்து எமது அர­சாங்­கத்தை உரு­வாக்கி 20ஆவது திருத்தச் சட்­டத்தை நிறை­வேற்ற நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம் என்றும்
டிலான் பெரெரா குறிப்­பிட்டார்.

இல்­லா­விடின் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு தேர்தல் நடத்­தப்­பட்டால் அதனை எதிர்­கொள்­வ­தற்கும் நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்தல் ஊடாக ரணில் விக்­ர­ம­சிங்க வீட்­டுக்கு அனுப்­பப்­ப­ட­வேண்டும் என்­பதே மக்­களின் விருப்­ப­மாகும் என்றும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு சுதந்­திரக் கட்­சியின் ஊடாக எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட இட­ம­ளிக்­க­மாட்டேன் என்று ஜனா­தி­பதி தெரி­வித்­துள்­ளமை மற்றும் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான தரப்­பினர் மூன்­றா­வது அணி­யாக கள­மி­றங்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றமை உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து  சுதந்­திரக் கட்­சியின் பேச்­சாளர் மேற்­கண்ட விட­யங்­களை குறிப்­பிட்டார்.

அவர் இந்த விடயம் குறித்து மேலும் தெரி­விக்­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­குவோம். அதற்­கான பாரிய முயற்­சி­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்றோம். பாரா­ளு­மன்றத் தேர்­தலில் யாரை கட்­சியின் சார்பில் வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றக்­கு­வது என்­பது குறித்த முடிவை கட்­சியின் மத்­திய குழுவே எடுக்கும். அந்தத் தீர்­மா­னத்தை எடுக்க தனி நப­ரினால் முடி­யாது.

எனவே மஹிந்த ராஜ­பக்ஷ போட்­டி­யி­டு­வ­தற்கு சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு அனு­ம­தி­ய­ளிக்கும்.மேலும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது ஏனைய கட்­சி­க­ளையும் இணைத்­துக்­கொண்டு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஊடா­கவே போட்­டி­யிடும். தேர்­தலில் போட்­டி­யிட்டு மக்கள் ஆத­ர­வுடன் ஆட்­சியை கைப்­பற்­றுவோம். மக்கள் ஆத­ரவு இல்­லாத பிர­த­மரை வீட்­டுக்கு அனுப்­புவோம். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அர­சாங்கம் பதவி வகிப்­ப­தையே நாட்டின் மக்கள் விரும்­பு­கின்­றனர். அதனை நாங்கள் நிறை­வேற்­றுவோம்.

பிர­தமர் வேட்­பா­ள­ராக அன்றி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்­கான வேட்­பா­ள­ராக மஹிந்த ராஜ­பக்ஷ போட்­டி­யி­டுவார். பிர­தமர் வேட்­பாளர் விட­யத்தில் எனக்கு எதுவும் தெரி­யாது. ஒரு­வேளை நாங்கள் பிர­தமர் வேட்­பா­ள­ராக யாரையும் கள­மி­றக்­காமல் போட்­டி­யிடும் வாய்ப்­புக்­களும் அதிகம் உள்­ளன. இதற்கு முன்­னரும் இவ்­வாறு செய்­தி­ருக்­கின்றோம்.
அதா­வது சுதந்­திரக் கட்­சியில் எவ்­வி­த­மான பிரி­வு­களும் இடம்­பெற விட­மாட்டோம்.

மஹிந்த – மைத்­திரி தரப்பை ஒன்­றி­ணைத்து பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கள­மி­றக்­குவோம்.இந்­நி­லையில் தற்­போது நாம் மூன்று தெரி­வு­களை அர­சாங்­கத்­துக்கு முன்­வைக்­கின்றோம். முத­லா­வது விட­ய­மாக தேர்தல் முறையை மாற்­று­வ­தற்­கான அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அர­சாங்­கத்தைக் கோரு­கின்றோம். அவ்­வாறு 20 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுத்தால் நாங்கள் அதற்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்க தயா­ராக இருக்­கின்றோம். அதன் பின்னர் தேர்­த­லுக்கு செல்ல முடியும்.

இந்­நி­லையில் 20 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்ற அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­கா­விடின் இரண்­டா­வது தெரி­வாக பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வந்து அர­சாங்­கத்தை தோற்­க­டிக்­கவும் நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். அவ்­வாறு அர­சாங்­கத்தை தோற்­க­டித்து எமது அர­சாங்­கத்தை அமைத்தால் அந்த அர­சாங்­கத்தில் நாங்கள் தேர்தல் முறை மாற்றத்தை நிறைவேற்றுவோம்.

இந்த இரண்டு தெரிவுகளையும் தாண்டி மற்றுமொரு தெரிவும் எங்களிடம் உள்ளது. அதாவது உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் ஊடாக ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். அதனை செய்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.