பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் பலர் ஐ.தே.க வில் இணையவுள்ளனர் – ரவி !

  மஹிந்த ராஜபக்ஷ தலை­மை­யி­லான மூன்­றா­வது அணிக்கு எதி­ரான சூட்­சும திட்­டத்தின் விளை­வாக அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் பலர் ஐ.தே.க வில் இணையவிருப்­ப­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் உப தலை­வரும் நிதி அமைச்­ச­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

fm

மூன்றாம் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வைத்­தியம் தயா­ராக இருக்­கி­றது. இத­னூ­டாக அடுத்த தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷவின் அணிக்கு பலத்த தோல்­வியை நாம் பெற்றுக் கொடுப்போம். எனவும் அவர் தெரி­வித்தார். ஐ.ம.சு.மு.வினர் பலர் ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணை­ய­வி­ருப்­ப­தாக கிடைத்த தகவல் தொடர்பில் வின­விய போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான குழு­வினர் அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் கள­மி­றங்க தயா­ராகி வரு­கின்­றனர். இந்த நட­வ­டிக்கை எந்த விதத்­திலும் சாத்­தி­ய­மா­காது.

இதற்­கான சூட்சும திட்­டங்­களை ஐக்­கிய தேசிய கட்சி முன்­னெ­டுத்து வரு­கி­றது. இதற்­க­மைய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் பலர் எமது கட்­சியில் இணைய தயா­ராக உள்­ளனர். அதற்கு கட்­சி­யினர் அனை­வரும் விருப்பம் தெரி­வித்­துள்­ளனர். எனினும் முன்னாள் அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்­லவை மாத்­திரம் இணைப்­ப­தற்கு பர­வ­லாக எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்டு வருகின்றன.

இதன்பிரகாரம் மூன்றாம் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வைத்தியம் தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.