இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது !

crime-arrest

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 14 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் எம்.மெராண்டா தெரிவித்துள்ளார்.

 மூன்று படகுகளில் திங்கட்கிழமை (01) இரவு இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு, அவர்களின் 3 படகுகளும் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 குறித்த மீனவர்களிடம் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த உதவிப்பணிப்பார் எம்.மெராண்டா, விசாரணைகளின் பின் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் குறித்த 14 மீனவர்களும் ஒப்படைக்கப்படுவர் என தெரிவித்தார்.