சிரிய அலெப்போ மாகா­ணத்தில் படை­யினர் நடத்­திய வான் தாக்­கு­தலில்72 பேர் உயி­ரி­ழப்பு;70 பேர் காயம் !

சிரிய அலெப்போ மாகா­ணத்தில் அர­சாங்க உலங்­கு­வா­னூர்­தி­களைப் பயன்­ப­டுத்தி அந்­நாட்டுப் படை­யினர் சனிக்­கி­ழமை நடத்­திய பீப்பா குண்டுத் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 72 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள அல் – பாப் நகரில் இடம்­பெற்ற தாக்­கு­தலில் மட்டும் 60 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 70 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
அதே­ச­மயம் கிளர்ச்­சி­யா­ளர்­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள அலெப்போ நகரில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் 12 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

சிரிய அர­சாங்­க­மா­னது பீப்பா குண்­டு­களை பயன்­ப­டுத்தி நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் தாக்­கு­தல்­க­ளுக்கு தொடர்ந்து மறுப்புத் தெரி­வித்து வரு­கி­றது.

இந்­நி­லையில் மேற்­படி தாக்­கு­தல்­களில் இடிந்து விழுந்த கட்­டட இடி­பா­டு­களின் கீழி­ருந்து சிறு­மி­யொ­ருவர் அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்ளார்.
இது அந்­நாட்டு ஜனா­தி­பதி பஷார் அல் – அஸாத்தின் படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட மிக மோச­மான தாக்­கு­தல்­களில் ஒன்­றாக விளங்­கு­கி­றது.

இதன் போது சன­சந்­தடி மிக்க சந்­தை­யொன்று உட்­பட பல பிர­தே­சங்கள் குண் டுத் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்­ளன.இந்தத் தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­களில் கிளர்ச்­சி­யா­ளர்­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள ஷார் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற பீப்பா குண்டுத் தாக்­கு­தலில் பலி­யான நான்கு சிறு­வர்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்­பட ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த 12 பேர் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

இந்த பீப்பா குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு ஐக்­கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிரிய விமானப் படை யினர் இவ்வாறு தமது பிரஜைகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளமை முழு மையாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன் றென அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.