புதிய நிபுணர் குழுவை அமைக்க இணக்கம் .

கடந்த வாரம் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மாநாட்டில் பேசு பொருளாக இருந்த ஜனாஸா எரிப்பு விவகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொண்ட சாதகமான நிலைப்பாட்டிற்கு அமைய ,
இன்று வியாழன் மாலை (10) பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றது.

 

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் , நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் அலி சப்றி , தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா,காதர் மஸ்தான் , உட்பட ஏனைய முஸ்லிம் எம்.பிக்களுடன்
சுகாதாரத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர் .

எனினும் இக்கூட்டத்தில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது பற்றி எத்தகைய சாதகமான முடிவுகளும் எட்டப்படவில்லை. இருந்தபோதும் ஜனாஸா நல்லடக்கம் பற்றி ஆராய்வதற்காக புதிய நிபுணர் குழுவை நியமிப்பதற்கு மாத்திரம் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.