சாய்ந்தமருதில் பொலிசாருக்கு இடையூறு விளைவித்தவருக்கு கல்முனை நீதிமன்றம் இறுக்கமான தீர்ப்பு!

neethi

எம்.வை.அமீர் 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயத்தில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் பரந்துபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இவ்வேளையில், கடந்த 2014-03-27ம் திகதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு அவர்களது கடமையை செய்வதற்கு இடையூறு விளைவித்த சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக கல்முனை பொலிசார் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். குறித்த நபர்மீதான விசாரணை கல்முனை நீதிமன்ற நீதிபதி ஏ.ஜுட்சன் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டபோது  குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.

2015-05-28 ல் கல்முனை நீதிமன்ற நீதிபதி ஏ.ஜுட்சன் அவர்கள் குறித்த குற்றவாளிக்கு 1500 ரூபாய் தண்டம் விதித்ததுடன் 5 வருட ஒத்திவைக்கப்பட்ட, 1வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.