ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மலேசிய மன்னர் சுல்தான் மொஹமட் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மலேசிய மன்னர் சுல்தான் மொஹமட்டை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

சமகால இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மலேசிய மன்னர் சுல்தான் மொஹமட் தனது பாராட்டுக்களை குறித்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மலேசிய பிரதமரையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.

இலங்கைக்குத் தேவையான ஆதரவை வழங்க தமது நாட்டு அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் மலேசிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் மலேசிய விஜயத்தில் இரு நாடுகளுக்குமிடையே 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடபட்டுள்ளன.

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பவுள்ளார்.