ஞான­சார தேரருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க ஒருபோதும் பின்­னிற்கப் போவ­தில்லை!

பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரை நான் ஒரு­போதும் பாது­காக்­க­வில்லை. அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கா­தி­ருக்­கு­மாறு நான் வலி­யு­றுத்­த­வு­மில்லை.
maithiri

சட்­டத்தை மீறும் எவ­ரா­யினும் இன மத பேத­மின்றி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறே நான் சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஜனா­தி­ப­திக்­கு­மி­டை­யி­லான விசேட சந்­திப்பு நேற்று மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது. இதன் போதே ஜனாதிபதி மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தலை­தூக்­கி­யுள்ள இன­வாத செயற்­பா­டுகள் தொடர்பில் கலந்­து­ரை­யாடும் பொருட்டே மேற்­படி சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இதன்­போது பொது பல சேனா பொதுச் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் இருக்­கின்ற போதிலும் எந்­த­வித சட்ட நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­டாமை தொடர்பில் முஸ்லிம் எம்.பி.க்கள் அதி­ருப்­தியை வெ ளிப்­ப­டுத்­தினர்.

அத்­துடன் அவர் கைது செய்­யப்­ப­டா­மைக்கு ஜனா­தி­ப­தி­யா­கிய நீங்­கள்தான் கார­ணமா என்றும் கேள்வி எழுப்­பினர். இதன்­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். இதே­வேளை அண்­மையில் நடை­பெற்ற மத தலை­வர்­களின் நல்­லி­ணக்க கூட்­டத்­திற்கு ஞான­சார தேரரை அழைத்­தது ஏன் என்றும் முஸ்லிம் அமைச்­சர்­களும் எம்.பி.க்களும் ஜனா­தி­ப­தி­யிடம் கேள்­வி­யெ­ழுப்­பினர்.

இதற்குப் பத­ல­ளித்த ஜனா­தி­பதி, ஞான­சார தேரரை பேச்­சு­வார்த்­தைகள் மூல­மான நல்­லி­ணக்க வழி­மு­றைக்கு கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சியின் ஓர் அங்­க­மா­கவே நாம் அக் கூட்­டத்­திற்கு அவ­ரையும் அழைத்தோம். எனினும் அவர் நல்­லி­ணக்­கத்­திற்கு ஒத்­து­ழைக்­காத வகையில் செயற்­பா­டு­வா­ராயின் அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு பின்­னிற்கப் போவ­தில்லை என்றும் ஜனா­தி­பதி பதி­ல­ளித்­துள்ளார்.

கடந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற சம்­ப­வங்கள்,  அவை தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட பொலிஸ் முறைப்­பா­டுகள் தொடர்பில் எது­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­டாமை குறித்த விப­ரங்­களும் ஜனா­தி­ப­தி­யிடம் முஸ்லிம் எம்.பி.க்களால் கைய­ளிக்­கப்­பட்­டன.  இச் சந்­திப்பில் முஸ்லிம் அமைச்­சர்­க­ளான ஏ.எச்.எம்­பௌசி , ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், பைசர் முஸ்­தபா, ஹிஸ்­புல்லா, பிர­தி­ய­மைச்­சர்­க­ளான ஹரீஸ், பைசால் காசிம், அமீ­ரலி, எம்.பி.க்களான முஜிபுர் ரஹ்மான், மரிக்கார், காதர் மஸ்தான், இஷாக் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.