விசேட ஹெலி மூலம் காத்தான்குடியை சென்றடைந்த அமைச்சர் றிசாத்

 இலங்கை முஸ்லிம்களின் பேரபிமானம் பெற்ற இந்தியாவின் தமிழ்நாடு அதிராம்பட்டிணத்தப் பிறப்பிடமாகவும், காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபரும், இலங்கையில் பல நூறு உலமாக்களையும், ஹாபிழ்களையும் உருவாக்கியவரும், மூத்த உலமாவும், கொழும்பு சம்மாங்கோடு ஜாமிஉல் அழ்பர் ஜும்ஆ பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளருமான சங்கைக்குரிய மௌலானா மௌலவி ‘ஷைகுல் பலாஹ்’ எம்.ஏ. அப்துல்லாஹ் (றஹ்மானி) பெரிய ஹஸ்ரத் அவர்கள் நேற்று 12 புதன்கிழமை மாலை (வபாத்தானார்கள்) மரணமடைந்தார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

14681627_321412711559609_2376256844243470988_n_fotor

அவருடைய ஜனாஷா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விஷேட வானூர்தி மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் அவர்கள் காத்தான்குடியை வந்தடைந்தார்கள்.

இதே வேளை கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் .

14713537_321412661559614_1952663671811901876_n_fotor

14720461_321412831559597_7907056694952046939_n_fotor