“அடுத்த டெங்கு நோயாளி நீங்களாக இருக்கலாம் அதற்கு இடமளிக்க வேண்டாம்”

க.கிஷாந்தன்

 

“அடுத்த டெங்கு நோயாளி நீங்களாக இருக்கலாம் அதற்கு இடமளிக்க வேண்டாம்” எனும் தெனிபொருளிள் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் டெங்கு நொய் ஒழிப்பு திட்டம் 2016 செப்டம்பர் மாதம் 27ந் திகதி முதல் 2016 ஒக்டோபர் மாதம் 03ம் திகதி வரை நடைபெறுகின்றது.

sam_2478_fotor

அந்தவகையில் நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக 27ம் திகதி கொட்டகலை கொமர்ஷல் கல்வியல் கலாசாலையில் டெங்கு நோய் சம்பந்தமான விழிப்புனர்வு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றதோடு, 28ந் திகதி கொட்டகலை நகரில் டெங்கு பரவக்கூடிய அபாயகரமான இடங்களை கண்டறியும் பரிசோனையும் நடைபெற்றது.

sam_2466_fotor

இதில் பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடி படையினர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.

 

இதன்போது பிரதேசத்தில் சுத்தத்தை பேணுவதற்கு ஒத்துழைப்பை பெற்றுத்தாருங்கள் என நுவரெலியா பிரதேச சபை மக்களிடம் கேட்டுக்கொள்கின்றமை குறிப்பிடதக்கது.

sam_2464_fotor