இனவாதிகளை கண்டு பிடித்த மந்திரவாதி ஹக்கீம் ..!

 

தனது அரசியல் வாழ்வுக்கு ஆப்பு அடிக்க முஸ்லிம் தலைமைகள் இன்று ஒன்று சேர்ந்து விட்டார்கள் அதற்கு உரம் ஊட்டி நீர் போடும் கிழக்கின் எழுச்சியின் வளர்ச்சியை கண்ட அச்சத்தில் கிழக்கின் எழுச்சியை இனவாத சக்தியாக அடையாளம் கண்டுள்ளார் மந்திரவாதி ஹக்கீம் 

rauf-hakeem

ஹக்கீம் அடையாளம் கண்ட இனவாதிகள்  இனவாதத்துடன் நடந்து கொண்ட ஏதாவது சம்பவத்தை அல்லது அவர்களது பேச்சை அடையாளப்படுத்தாமல் தனது எதிரிகளை மட்டும் இனவாதிகளாக அடையாளம் கண்ட ஹக்கீம்  

இன்று நாட்டில் முஸ்லிம்களின் சமய கலாச்சாரத்தில் தடைகள் போடும் இனவாத இயக்கமான பொதுபல சேனாவை மறந்து விட்டாரா ? அல்லது பொதுபலசேனாவின் அன்பு நன்பன் ஹக்கீம் தான் என்பதை புரியவைத்துள்ளாரா ? பக்கத்திலிருந்து பள்ளிவாசலுக்கு கல்லெறிபவர்களை தான் மறந்து விட்டாரா?எங்கேயோ விடயம் இருக்க தனது எதிரியை முழு சமுகத்தின் எதிரியாக எடுத்து காட்டுவது என்பது ஒரு அரசியல்வாதியின் வங்குரோத்து தனம் என்று தான் கூற வேண்டும் 

கடந்த காலங்களில் கிழக்கு மாகானத்துக்கு வெளியில் உள்ள  அரசியல்வாதிகள் கிழக்கு மக்களை எதிரிகளாகவே சிந்தித்தனர் அவர்களின் தலைக்குள் இருந்த சிந்தனையை தான் ஹக்கீம் அவர்களின் தலைக்குள் இருக்கிறது என்பதை இப்போது அவரே  வெளிப்படுத்தியூள்ளார் இது ஒன்று ஆச்சரியப்பட கூடிய விடயம் அல்ல 

அஸ்ரப் அவர்கள் மரனித்த பின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியை ஏற்றுக் கொண்ட ஹக்கீம் கிழக்கு மக்களை  எதிரியாகவே பார்க்கின்றார் என்பது மக்களுக்கு தெரியும் ஆனால் அஸ்ரப்பின் முகத்துக்காக ஹக்கீமை கௌரவபடுத்திய மக்கள் இனியும் ஹக்கீமின் நயவஞ்சக தனத்தை தாங்கி கொள்ள முடியாமல் இன்று ஹக்கீமை தலைமை பதவியிலிருந்து விரட்ட முடிவு செய்துள்ளனர் என்பதை நன்கு உணர்ந்த ஹக்கீம் இன்று வீசர் பிடித்த நாய் ஆட்டை கடிக்கும் மாட்டை கடிக்கும் கண்டதெல்லாம் கடிக்கும் என்பது போல் தனது தலைமை பதவி போகப் போகிறது என்ற அச்சத்தில் தனது எதிரிகளை இனவாதிகளாகவும் போகும் இடமெல்லாம் விரக்தியுடன் பேசுவதையும் காணக்கூடியதாக உள்ளது இவைகளை யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை என்ற மண ஊளச்சல் காரணமாக ஹக்கீம் உப்பு சப்பு இல்லாத அறிக்கை விடுகிறார் 

கிழக்கின் எழுச்சி என்பது முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக போராடும் ஒரு குழு அது இது வரை பல பத்திரிகை மகாநாடு  கூட்டங்களை நடத்தியுள்ளது அவர்கள் இனவாதம் பற்றி பேசவில்லை இனவாதமாக நடந்து கொள்ளவுமில்லை ஆனால் முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அரசியல் செய்யும் ஹக்கீம் முஸ்லிம் சமுகத்துக்கு துரோகம் செய்கிறார் அவரை தலைமை பதவியிலிருந்து நீக்கி விட்டு கிழக்கு மகன் ஒருவன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்பதே கிழக்கு எழுச்சியின் நோக்கம் அதற்கு மக்கள் ஆதரவும் இருக்கிறது இதை நன்றாக புரிந்தும் தன்னை கிழக்கு மக்கள் விரட்டினால் கிழக்கு மக்களை நாட்டு மக்கள் விரட்ட வேண்டும் என்று குரோத மனப்பாங்குடன் ஹக்கீம் மேற்கொள்ளும் நடவடிக்கை தான் கிழக்கின் எழுச்சி இனவாத குழு என்ற வதந்தி இதற்கு இந்த நாட்டு மக்கள் தலைசாய்க்க மாட்டார்கள் ஹக்கீம் யார் என்பது மக்கள் நன்கு தெரியும் 

இது வரை கிழக்கு மக்களிடையே பொய் கூறி ஏமாற்றி எவ்வளவோ பித்னாக்களை உருவாக்கி அரசியல் செய்து சொகுசா வாழும் ஹக்கீம் இன்று கிழக்கு மக்களை மற்ற இன மக்களிடம் இனவாதிகளாக எடுத்து காட்டுவது என்பது எவ்வளவு நன்றி கெட்ட செயல்  உப்பிட்டவனின் உள்ளங்கையை வெட்டுபவனின் தலையை வெட்ட வேண்டும் என்பது போல் இனியாவது கிழக்கு மக்கள் ஹக்கீமை கூட்டி வந்து மாலை போட்டு மாப்புனை கூட்டாமல் ஹக்கீமை தனிமைப்படுத்த ஒன்று சேர வேண்டும் அப்படி செய்யாமல் போனால் இலங்கையில் ஒன்றுக்கும் உதவாத சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் அடையாளம் காணப்படும் என்பதில் சந்தேகமில்லை அதற்கு ஹக்கீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் காரணம் என கிண்னஸ் புத்தகத்தில் எமது எதிர்கால சமுதாயம் எழுத வேண்டிய நிலை வரும் 

எனவே ஹக்கீம் காங்கிரஸ் உறுப்பினர்களை விரட்ட ஒன்றுபடுவோம் அல்லாஹ் நமக்கு உதவி செய்வான்

ஜெமீல் அகமட்