இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து உதவிகள் !

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதியிலிருந்து மன்முனை வடக்க வவுனத்தீவு பிரதேச செயலகத்துக்குற்பட்ட கோவில்கள், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான உதவி – உபகரணங்கள் இன்று வெள்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது. 
ad783df9-5290-49e5-b0cd-9ad23d3250c1
இதன் போது வவுனத்தீவு பிரதேச விளையாட்டுக்கழகங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், பொது நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளும் வழங்கி கையளிக்கப்பட்டது. விசேடமாக
நெடியமடு பொது மலசலகூடம் இரண்டு, கொத்தியாபுலை பொதுக்கிணறு மற்றும் பிரதேச மருத்துவ நிலையத்திற்கான மின்சாதனப்பொருட்களுக்கான நிதி ஒதுக்கீடு என பல உதவிகள் இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது. 
6d74b6f5-b0c3-4db0-b693-5c630ec904f9
இந்நிகழ்வில் வவுனதீவு பிரதேச செயலாளர் சுதாகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்இ விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் இனைப்புச்செயளாலர் றுஸ்வின் முஹம்மட் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிபிடத்தக்கது.