புர்கா அல்­லது நிகாப் எனப்­படும் ஆடைக்கு தடை­வி­திக்­கு­மாறு முன்­மொ­ழி­யப்­பட்ட யோச­னை பிரதமரால் நிராகரிப்பு !

இலங்­கையில் முஸ்லிம் பெண்கள் முகம் உட்­பட உடலை முற்­றாக மறைத்து அணியும் புர்கா அல்­லது நிகாப் எனப்­படும் ஆடைக்கு தடை­வி­திக்­கு­மாறு புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­மொ­ழி­யப்­பட்ட யோச­னையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட­ன­டி­யாக நிரா­க­ரித்­துள்ளார்.

Ranil-18

தேசிய பாது­காப்பு கவுன்­சிலின் கூட்டம் சில தினங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற சமயம், புல­னாய்வுப் பிரிவின் உய­ர­தி­காரி ஒரு­வரே இந்த யோச­னையை முன்­வைத்­துள்ளார். 

நாட்டில் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் போன்ற குறிப்­பிட்ட பிரிவு முஸ்­லிம்கள் மத்­தியில் தீவி­ர­வாதப் போக்கு அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வ­தா­கவும் அவர்­க­ளா­லேயே புர்கா அல்­லது நிகாப்  ஆடைகள் அணி­யப்­ப­டு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள மேற்­படி பாது­காப்பு புல­னாய்வுப் பிரிவு உய­ர­தி­காரி, எனவே இதனை தடை செய்­வது நாட்டின் பாது­காப்­புக்கு உகந்­தது என்றும் தனது முன்­மொ­ழிவில் குறிப்­பிட்­டுள்ளார்.

எனினும் இந்த யோச­னையை கேட்­ட­வுடன் கடும் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அவ்­வாறு தடை விதிப்­பது அர­சாங்­கத்தை கடு­மை­யாகப் பாதிக்கும் என்றும் முஸ்லிம் நாடு­களின் எதிர்ப்பை சம்­பா­திக்க வேண்டி வரும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இலங்கை முஸ்லிம் சமூகம் கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் பொதுத் தேர்­த­லிலும் ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்­திற்கே தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தினர்.

எனவே அவர்­களை பாதிக்கும் வகை­யி­லான தீர்­மா­னங்­களை எம்மால் மேற்­கொள்ள முடி­யாது என்றும் பிர­தமர் இதன்­போது மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்த ஆடை புழக்­கத்தில் இருப்­பதால் அதனைப் பயன்­ப­டுத்தி தீவி­ர­வாத தாக்­கு­தல்­களை நடாத்­து­வ­தற்­கான வாய்ப்­பி­ருக்­கி­றது என்­பதே குறித்த பாது­காப்பு புல­னாய்வு உய­ர­தி­கா­ரியின் வாத­மாகும். எனினும் மேற்­படி யோச­னையை முன்­மொ­ழி­வ­தற்கு முன்­ன­தாக, முப்­படை தள­ப­திகள் மூவரும் நாட்டின் சம­கால பாது­காப்பு நிலை­வ­ரங்கள் தொடர்பில் தேசிய பாது­காப்பு கவுன்சில் உறுப்­பி­னர்­க­ளுக்கு விளக்­க­ம­ளித்­துள்­ளனர்.

எனினும் அவர்­களில் எவரும் புர்கா அல்­லது நிகாப் ஆடை­யா­னது நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக உள்­ள­தாக எந்த இடத்­திலும் சுட்­டிக்­காட்­ட­வில்லை என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இதற்­கி­டையில், மேற்­படி யோச­னை­யா­னது அர­சியல் உள்­நோக்கம் கொண்­டது எனவும் இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் அர­சாங்­கத்தின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்தும் முயற்­சியே இது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் புர்கா மற்றும் நிகாப் ஆடைகள் அணிவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் நெதர்லாந்தில்   பகுதியளவில் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.