வஸீம் தாஜுதீன் படு­கொலை சி.சி.ரி.வி. காட்­சிகள் இன்று கன­டா­வுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளன!

waseemபிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விசா­ர­ணைகள் தொடர்பில் கைப்­பற்­றப்­பட்ட சி.சி.ரி.வி. காட்­சிகள் இன்று கன­டா­வுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

கன­டாவின் பிரிடிஷ் கொலம்­பியா இர­சா­யன ஆய்வு கூடத்­துக்கு இந்த சி.சி.ரி.வி.காட்­சிகள் இன்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கொண்டு செல்­லப்­ப­ட­வுள்­ளன.

கொழும்பு நீதிவான் நீதி­மன்றின் கட்­டுப்­பாட்டில் இருக்கும் இந்த சி.சி.ரி.வி.காட்­சிகள் இன்று குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சி.டப்­ளியூ. விக்­ர­ம­சே­கர, சார்ஜன் ரத்நப் பிரிய ஆகி­யோரால் கையேற்­கப்­பட்டு அவர்கள் ஊடா­கவே கன­டா­வுக்கு எடுத்துச் செல்­லப்­ப­ட­வுள்­ளன.

இது தொடர்பில் 36 கேள்­வி­களைக் கொண்ட கொத்­தொன்­றினை தயார் செய்­துள்ள குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு அது தொடர்பில் மன்­றுக்கு அறி­வித்­துள்­ள­துடன், அந்த கேள்­விக்­கொத்­துக்­கான பதில்­க­ளையே சி.சி.ரி.வி. ஆய்­வு­களில் இருந்து எதிர்ப்­பார்ப்­ப­தாக தெரி­விக்­கின்­றனர்.

முன்­ன­தாக பிர­பல றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை­யுடன் தொடர்­பு­டைய சி.சி.ரி.வி காட்­சி­களை அடை­யாளங் காணும் செயற்­பாட்­டிற்­காக கன­டாவில் அமைந்­துள்ள  பிரிட்டிஸ் கொலம்­பியா நிறு­வ­னத்தின் சேவையை பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு கிடைத்­துள்­ள­தாக குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­களம் நீதி­மன்­றத்­தில்­ ­க­டந்த மார்ச் முதலாம் திகதி அறி­வித்­துள்­ளது.

சர்­வ­தேச பொலிஸார் ஊடாக முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கையின் பல­னாக கன­டாவின் குறித்த நிறு­வ­னத்­துக்கு தெளி­வற்ற குறித்த சி.சி.ரி.வி. காட்­சி­களை அனுப்பக் கூடிய சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு இதன்­போது தெரி­வித்­தி­ருந்­தது. 

அத்­துடன் குறித்த நிறு­வனம் ஊடாக சி.சி.ரி.வி. காட்­சிகள் குறித்த ஆய்வு தொடர்பில் நேர­டி­யா­கவும் தொடர்­பு­களைப் பேணும் வாய்ப்பு உள்­ள­தா­கவும் புல­னாய்வுப் பிரிவு அறி­வித்­தி­ருந்­தது.

சி.சி.ரி.வி. காட்­சிகள் கொழும்பு பல்­க­லையின் கணினி தொடர்­பி­லான ஆய்வு பிரி­வுக்கு அனுப்­பப்­பட்ட போதும் அங்கு அதனை அடை­யாளம் காண முடி­யாது போனது.

இந் நிலையில் அப்­பல்­க­லைக்­க­ழகம் குறித்த காட்­சி­களை சர்வதேச நிறுவனம் ஒன்றுக்கு அனுப்ப மன்றுக்கு பரிந்துரை செய்தது.

இந் நிலையிலேயெ மன்றின் அனுமதிக்கு அமைய இன்று அந்த சி.சி.ரி.வி.காட்சிகள் கனடாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.