தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் மகிழ்ச்சி!

தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் மகிழ்ச்சி வௌியிட்டுள்ளார். 

Atul Keshap v3 8x10

யுத்தக் குற்றங்கள் குறித்து ஆராய்ந்து செயற்பட அரசாங்கம் கொண்டு வந்துள்ள பொறிமுறை மற்றும் புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்து மிக்க மகிழ்ச்சியடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த வேளையே அதுல் கேஷாப் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

அமெரிக்க வைத்தியக் குழுவினர் யாழ் பகுதிக்கு வந்து மேற்கொண்டுள்ள வைத்திய முகாம்கள் குறித்து ஆராயும் நிமித்தமே இவரின் இந்த யாழ் விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அவர் தனது விஜயத்தின்போது வடக்கின் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்துள்ளார்.