நல்­லாட்­சிக்­கான தேசிய அர­சாங்­கத்தின் கன்னி சம்­மே­ளனம் மாத்­த­றையில்…!

ranil maithiri

நல்­லாட்­சிக்­கான தேசிய அர­சாங்­கத்தின் கன்னி சம்­மே­ளனம் வெள்­ளிக்­கி­ழமை மாத்­த­றையில் இடம்­பெ­ற­வுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோரின் தலை­மையில் இடம்­பெ­ற­வுள்ள சம்­மே­ள­னத்­திற்கு அனைத்து அர­சியல் கட்­சி­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

நாட்டின் நன்மை கருதி அமை­யப்­பெற்ற தேசிய அர­சாங்கம் இது வரையில் வெற்றி கொண்ட சவால்கள் மற்றும் எதிர்­கால இலக்­குகள் தொடர்பில் இந்த சம்­மே­ள­னத்தின் போது அறி­விக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் ஏற்­பாட்டு பணி­க­ளுக்கு வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலைமை தாங்­கு­கின்றார். 

மாத்­தறை உயன்­வத்தை மைதா­னத்தில் மாலை 3 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்ள நல்­லாட்­சிக்­கான தேசிய அரசாங்கத்தின் கன்னிச் சம்மேளனத்தில் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.