நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் கன்னி சம்மேளனம் வெள்ளிக்கிழமை மாத்தறையில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ள சம்மேளனத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நன்மை கருதி அமையப்பெற்ற தேசிய அரசாங்கம் இது வரையில் வெற்றி கொண்ட சவால்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பில் இந்த சம்மேளனத்தின் போது அறிவிக்கப்படவுள்ளதுடன் ஏற்பாட்டு பணிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமை தாங்குகின்றார்.
மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் கன்னிச் சம்மேளனத்தில் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.