சமூக மாற்றத்திற்கான இளைஞர்களின் சக்தி எனும் தலைப்பில் கலந்துரையாடல்!

க.கிஷாந்தன்

 

மாத்தளை சமூக வலுவூட்டல் நிலையத்தின் தலைவர் சஞ்சய காந்தி ஏற்பாட்டில் சமூக மாற்றத்திற்கான இளைஞர்களின் சக்தி எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று (31.07.2016) அன்று மாத்தளை சமூக வலுவூட்டல் நிலைய காரியாலயத்தில் இடம்பெற்றது.

 

இந்த கலந்துரையாடலில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், பிரஜா சக்தி நிலையங்களின் பணிப்பாளர் முத்துகுமார், நுவரெலியா மஸ்கெலியா இளைஞர் பாராளுமன்றத்தின் உறுப்பினர் பொன்னம்பலம் சதீஸ்குமார் உட்பட மாத்தளை நகரை பிரதிநிதித்துவம் செய்கின்ற இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.

 

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

photo (4)-2_Fotor photo (2)_Fotor